ஹைதராபாத் உப்பளில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையே ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது.
இந்த நிலையில் ஹைதராபாத்தில் உள்ள சைபராபாத் பகுதிக்கு உட்பட்ட சில இடங்களில் கிரிக்கெட் டிக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு புகார் கிடைத்தது.
புகார் அடிப்படையில் போலீசார் வீடு ஒன்றில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு கிரிக்கெட் சூதாட்டம் நடத்தப்படுவது தெரியவந்தது.
போலீசாரை கண்டதும் அங்கிருந்த 11 பேரில் 7 பேர் தப்பி ஓடிவிட்டனர். நான்கு பேரை பிடித்த போலீசார் அவர்களிடமிருந்து 46 லட்சம் ரூபாய் ரொக்க பணம், 12 லட்சம் ரூபாய் வங்கி கணக்கில் இருப்பதற்கான ஆவணங்கள், 15க்கு மேற்பட்ட செல்போன்கள், லேப்டாப் ஆகியவை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். நான்கு பேரையும் கைது செய்துள்ள போலீசார் தப்பி ஓடிய ஏழு பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கில் காதலனின் தம்பி என கூறப்படும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம்…
This website uses cookies.