ஹைதராபாத் உப்பளில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையே ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது.
இந்த நிலையில் ஹைதராபாத்தில் உள்ள சைபராபாத் பகுதிக்கு உட்பட்ட சில இடங்களில் கிரிக்கெட் டிக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு புகார் கிடைத்தது.
புகார் அடிப்படையில் போலீசார் வீடு ஒன்றில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு கிரிக்கெட் சூதாட்டம் நடத்தப்படுவது தெரியவந்தது.
போலீசாரை கண்டதும் அங்கிருந்த 11 பேரில் 7 பேர் தப்பி ஓடிவிட்டனர். நான்கு பேரை பிடித்த போலீசார் அவர்களிடமிருந்து 46 லட்சம் ரூபாய் ரொக்க பணம், 12 லட்சம் ரூபாய் வங்கி கணக்கில் இருப்பதற்கான ஆவணங்கள், 15க்கு மேற்பட்ட செல்போன்கள், லேப்டாப் ஆகியவை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். நான்கு பேரையும் கைது செய்துள்ள போலீசார் தப்பி ஓடிய ஏழு பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.