டில்லியை சேர்ந்த நிர்பயா என்ற 23 வயது பெண், 2012 டிசம்பரில், ஓடும் பஸ்சில் ஆறு பேரால் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகி, கொடூரமாக துன்புறுத்தப்பட்டார். சிகிச்சை பலனின்றி அந்த பெண் மருத்துவமனையில் உயிர்இழந்தார்.
இந்த சம்பவம் நாடு முழுதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பாலியல் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க அறிவுறுத்தப்பட்டது. இதன் பின், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுபவர்களுக்கு துாக்கு தண்டனை வழங்கும் சட்டம் நடைமுறைக்கு வந்தது.
இந்நிலையில், காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானை சேர்ந்த முதல்வர் அசோக் கெலாட் செய்தியாளர்களிடம் கூறியதாவது : நிர்பயா வழக்குக்கு பின், பாலியல் குற்றவாளிகளை துாக்கிலிடும் சட்டம் நடைமுறைக்கு வந்தது.
இதனால், பாதிக்கப்பட்ட பெண் தனக்கு எதிராக சாட்சி சொல்லிவிடுவார் என்ற அச்சம் குற்றவாளிகளுக்கு ஏற்படுகிறது.
இதையடுத்து பலாத்காரத்திற்கு ஆளாகும் பெண்களை அவர்களை கொலை செய்வது அதிகரித்து வருகிறது. இந்த போக்கு மிகவும் ஆபத்தானது.இவ்வாறு அவர் கூறினார்.
ராஜஸ்தான் முதல்வரின் இந்த கருத்துக்கு பல தரப்பினரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். ‘பாலியல் பலாத்காரம் செய்தவர்களுக்கு துாக்கு தண்டனை கொடுக்கக் கூடாது என, அசோக் கெலாட் கூறுகிறாரா’ என, பலரும் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளனர்.
வரிசையாக லைக் போட்ட விராட் கோலி பாலிவுட் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வருபவர் அவ்னீட் கவுர். இவர் பல ஹிந்தி…
பிரபல இயக்குநர் சொன்ன கதைப்படி படம் முழுவதும் பாவாடை கட்டிக்கிட்டு வரவேண்டும் என்பதால் படத்தில் இருந்து விலகியுள்ளார் சூப்பர் ஸ்டார்.…
தேர்தலை நோக்கி விஜய் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை நோக்கி விஜய் நடைபோட்டுக்கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் இரண்டு…
விஜய் டிவி நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி பெரிய திரையில் வாய்ப்பு பெற்றவர் நடிகர் யோகி பாபு. டைமிங் காமெடி மூலம்…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பாஜக வடக்கு மண்டல் தலைவராக பாலகிருஷ்ணன் என்பவரது பதவி ஏற்பு விழா உசிலம்பட்டியில் உள்ள தனியார்…
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
This website uses cookies.