ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி 500 கோடி ரூபாய் மதிப்பில் ஆடம்பர பங்களா கட்டியுள்ளார். இந்த புகைப்படத்தை ஆளும் தெலுங்கு தேசம் கட்சி x சமூக வலைதளத்தில் பகிர்ந்து உள்ளது. ஆட்சி மாறியதும் ஜெகன்மோகன் ரெட்டி இதன் மூலம் வசமாக சிக்கி உள்ளார்.
அதாவது, சமீபத்தில் ஆந்திராவில் நடந்த சட்டசபை தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி தோல்வி அடைந்தார். தெலுங்கு தேச கட்சியை சேர்ந்த சந்திரபாபு நாயுடு முதல்வர் ஆனார். ஆட்சி மாறியதும் ஜெகன்மோகன் ரெட்டிக்கு பிரச்சனைகளும் வந்த வண்ணமே இருக்கிறது.
இந்நிலையில், கடந்த ஜூன் 15ஆம் தேதி தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஜெகன்மோகன் ரெட்டி வீட்டில் நடைபாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்கள் புல்டவுசர் மூலம் போலீசார் பாதுகாப்புடன் இடிக்கப்பட்டது அனைவரும் அறிந்த விஷயம். இதனிடையே, ஆந்திர மாநிலத்தில் உள்ள சுற்றுலா பகுதிகளில் ஒன்றான ரிஷிகொண்டா என்ற மலைப்பகுதியில் ஜெகன்மோகன் ரெட்டி ரூபாய் 500 கோடி மதிப்பில் ஒரு அரண்மனை போன்ற பங்களா கட்டி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த பங்களாவை தெலுங்கு தேச கட்சி எம்எல்ஏ காந்தா ஸ்ரீனிவாஸ் உள்ளூர் தலைவர்களுடன் பார்வையிட்டார். இந்த புகைப்படத்தை ஆளும் தெலுங்கு தேசம் கட்சி x சமூக வலைதளத்தில் பகிர்ந்து இருக்கிறது. இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என தெலுங்குதேசம் கட்சி தற்போது தெரிவித்திருக்கிறது. விலை உயர்ந்த கண்ணாடிகள், கிரானைட் கல் என மிக பிரம்மாண்டமாக பங்களா கட்டப்பட்டுள்ளது. பாத்ரூம் தொட்டிக்கு மட்டும் 25 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளனர். மொத்தம் 500 கோடி வரை செலவு செய்து ஜெகன்மோகன் ரெட்டி இந்த பங்களாவை கட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…
This website uses cookies.