ஒரே நாளில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை : ஜம்மு – காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் அதிரடி…!!!

Author: Babu Lakshmanan
12 March 2022, 10:05 am
Kashmir_Encounter_Terrorists_UpdateNews360
Quick Share

ஜம்மு – காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில், 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள ஜம்மு – காஷ்மீரில் தீவிரவாதிகளின் ஊடுரவல் அடிக்கடி நடந்து வருகிறது. இதனை முறியடிக்க, பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று இரவு முதல் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஷுவாக்லன் என்ற பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தியபோது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் தாக்குதல் நடத்தினர். இதில், ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான்.

இதேபோல, கந்தர்பால் மாவட்டம் உள்ளிட்ட 4 இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் மேலும் 3 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 1020

0

0