அப்பளத்திற்காக நடந்த அடிதடி… கலவரமாக மாறிய கல்யாண மண்டபம் : கோஷ்டி மோதலால் பரபரப்பு… வைரல் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
31 August 2022, 6:37 pm
Waffle - Updatenews360
Quick Share

கேரள மாநிலம் ஆலப்புழா அருகில் உள்ள ஹரிப்பாடு ஹரிப்பாடு முட்டம் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.

மணமகள் முட்டம் மற்றும் மணமகன் திருக்குன்றப்புழாவைச் சேர்ந்தவர்கள். இதில் மாப்பிள்ளையின் நெருங்கிய நண்பர்கள் பலரும் கலந்து கொண்டனர். திருமணம் முடிந்து மண்டபத்தில் விருந்து தொடங்கியது.

அப்போது பந்தி பரிமாறியவர்கள் மாப்பிள்ளையின் தோழர்களுக்கு அப்பளம் வைக்கவில்லை. இதனை ஒருவர் கேட்டபோது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மாப்பிள்ளையின் நண்பர்களுக்கே அப்பளம் இல்லையா? என்று மாப்பிள்ளையின் உறவினர்களும் அங்கே திரள, விருந்து நடந்த மண்டபம் களேபரமானது.

அப்போது மாப்பிள்ளை நண்பர் ஒருவர் மேஜை, நாற்காலிகளை அடித்து உடைக்க அதனை பெண் வீட்டாரும், மண்டப ஊழியர்களும் தட்டி கேட்டனர். இதில் பிரச்சனை பெரிதாக அங்க கோஷ்டி மோதல் ஏற்பட்டது.

மாறிமாறி இரு தரப்பினரும் மோதி கொள்ள மண்டப ஊழியர்கள் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். இதனை கண்டு மண்டபத்தில் இருந்த உறவினர்கள் சிதறி ஓடினர். தகவல் அறிந்து அப்பகுதி போலீசார் மண்டபத்துக்கு விரைந்து சென்றனர்.
அவர்கள் இரு தரப்பினரையும் அங்கிருந்து விரட்டி அடித்தனர். இந்த கோஷ்டி மோதல் திருமண மண்டப உரிமையாளர் முரளிதரன் அளித்த புகாரில் 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த சம்பவத்தை திருமணத்திற்கு வந்த சிலர் செல்போனில் படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். அது வைரலாகி பரவி வருகிறது.

Views: - 488

0

0