முதலமைச்சர் ஸ்டாலின் படத்தை வைத்து திதி கொடுத்த கன்னட அமைப்புகள் : இழிவான செயலால் பெங்களூரில் பரபரப்பு!!
காவிரியில் தமிழ்நாட்டுக்கு 5,000 கன அடி நீரை திறந்துவிட வேண்டும் என்பது உச்சநீதிமன்றத்தின் உத்தரவு. காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை உறுதி செய்து உச்சநீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கி இருந்தது.
ஆனால் தமிழ்நாட்டுக்கு சொட்டு நீரைக் கூட தரமாட்டோம் என கன்னட அமைப்புகள் போர்க்கொடி தூக்குகின்றன. கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசோ, காவிரியில் சொற்ப நீரைத்தான் திறந்துவிட்டுள்ளது.
காவிரியில் தமிழ்நாட்டுக்கான பங்கை திறந்துவிடக் கூடாது என கர்நாடகா பாஜக முதலில் போராட்டத்தைத் தூண்டிவிட்டது. இதனைத் தொடர்ந்து கன்னட விவசாய அமைப்புகள், கன்னடர் அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன. மண்டியா, மைசூர், சாம்ராஜ் நகர் பகுதிகளில் தொடர் ம்றியல், முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து பெங்களூரில் இன்று பல்வேறு கன்னட அமைப்புகள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன. பெங்களூர் பந்த் அறிவிப்பை முன்னிட்டு கல்வி நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள் ஏற்கனவே விடுமுறை அறிவித்துவிட்டன. அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன. பல இடங்களில் கடைகள், ஹோட்டல்கள் திறந்திருந்தன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டிருந்தது. இத்தடையை மீறி பெங்களூர் நகரின் பல இடங்களில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. தடையை மீறிய் போராட்டம் நடத்தியவர்களை போலீசார் உடனுக்குடன் அப்புறப்படுத்தி கைது செய்து வருகின்றனர்.
இப்போராட்டங்களின் போது கன்னட அமைப்பினர் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவப்படத்தை வைத்து இழிவான செயலை செய்தது அதிர்ச்சியைத் தந்துள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவப் படத்துக்கு பொட்டு வைத்து மாலை அணிவித்து திதி கொடுத்தும் அவர் உருவப் படம் முன்பாக ஆண்களும் பெண்களும் ஒப்பாரி வைத்தும் போராட்டம் நடத்தினர்.
தமிழ்நாட்டுக்கு எதிரான போராட்டமாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் ஸ்டாலின் உருவப் படத்தை முன்வைத்து கன்னடர்கள் செய்த இந்த இழிசெயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த இழிசெயலை தடுக்காமல் பெங்களூரில் போலீசார் வேடிக்கை பார்த்து கொண்டிருந்ததும் பெரும் வேதனைக்குரியதாகும்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.