ஓடும் பேருந்தில் ஜன்னல் கண்ணாடியை திறப்பதில் ஏற்பட்ட தகராறின் போது பெண்கள் மாறி மாறி செருப்பால் அடித்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரூவில் பிரதான சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்தில் பயணித்த பெண் பயணி ஒருவர் ஜன்னல் கண்ணாடியை தன் பக்கம் திறந்துள்ளார். இதனால், அந்தப் பெண்ணுக்கு பின் இருக்கையில் அமர்ந்திருந்த மற்றொரு பெண்ணின் ஜன்னல் கண்ணாடி மூடியுள்ளது. இதனால், தன் பக்கம் ஜன்னலை திறந்து விடும்படி அவர் கேட்டுள்ளார். ஆனால், அதற்கு முன் இருக்கையில் அமர்ந்திருந்த பெண் பயணி மறுத்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது.
இதனால், இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இரு பெண்களும் மாறி மாறி செருப்பதால் தாக்கிக் கொண்டனர். இதனால், அதிர்ந்து போன சக பயணிகள், பேருந்தை நிறுத்தும்படி சத்தம் போட்டுள்ளனர். இதையடுத்து, பேருந்தை நிறுத்திய ஓட்டுநர், சண்டை போட்ட இரு பெண்களையும் பேருந்தில் இருந்து கீழே இறக்கி விட்டுள்ளார்.
பெண்கள் மாறி மாறி செருப்பால் தாக்கிக் கொண்ட இந்த சம்பவத்தை பேருந்தில் இருந்த பயணி ஒருவர் வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இது தற்போது, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.