தன்னை தாக்க வந்த சிறுத்தையின் கால்களை கட்டி, பைக்கில் பின்புறத்தில் கட்டிக் கொண்டு சென்ற இளைஞரால் பரபரப்பு நிலவியது.
கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டத்தைச் சேர்ந்த பகிவாலு கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து. இவர் தனது தோட்டத்தில் சிறுத்தை ஒன்று புகுந்ததை பார்த்துள்ளார். உடனே சிறுத்தை தன்னை தாக்க வருவதை உணர்ந்த அவர், தற்காப்புக்காக, ஆட்டை பிடிப்பது போல நினைத்து, சிறுத்தையை போராடி பிடித்துள்ளார்.
மேலும், அதன் 4 கால்களையும் கயிற்றால் கட்டி, அதனை வனத்துறை அலுவலகத்திற்கு பைக்கில் எடுத்துச் சென்றுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், “சிறுத்தையை பிடித்து கொண்டு வர முத்து கையாண்ட முறை சற்று மோசமானது. இருப்பினும், அவருக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததையே காட்டுகிறது. சிறுத்தையை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதே அவரது நோக்கம். மற்றபடி, அதனை துன்புறுத்தும் எண்ணம் அவரிடம் இல்லை. சிறுத்தை பலவீனமாக இருக்கிறது,” எனக் கூறினார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.