தன்னை தாக்க வந்த சிறுத்தையின் கால்களை கட்டி, பைக்கில் பின்புறத்தில் கட்டிக் கொண்டு சென்ற இளைஞரால் பரபரப்பு நிலவியது.
கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டத்தைச் சேர்ந்த பகிவாலு கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து. இவர் தனது தோட்டத்தில் சிறுத்தை ஒன்று புகுந்ததை பார்த்துள்ளார். உடனே சிறுத்தை தன்னை தாக்க வருவதை உணர்ந்த அவர், தற்காப்புக்காக, ஆட்டை பிடிப்பது போல நினைத்து, சிறுத்தையை போராடி பிடித்துள்ளார்.
மேலும், அதன் 4 கால்களையும் கயிற்றால் கட்டி, அதனை வனத்துறை அலுவலகத்திற்கு பைக்கில் எடுத்துச் சென்றுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், “சிறுத்தையை பிடித்து கொண்டு வர முத்து கையாண்ட முறை சற்று மோசமானது. இருப்பினும், அவருக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததையே காட்டுகிறது. சிறுத்தையை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதே அவரது நோக்கம். மற்றபடி, அதனை துன்புறுத்தும் எண்ணம் அவரிடம் இல்லை. சிறுத்தை பலவீனமாக இருக்கிறது,” எனக் கூறினார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.