கர்நாடகாவில் தனியார் பள்ளி ஆசிரியை ஒருவர் பட்டப்பகலில் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹாசன் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் அர்பிதா (23) என்பவர் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இன்று காலை வழக்கம் போல பள்ளிக்கு சென்று கொண்டிருந்த 3 மர்ம நபர்கள், ஆசிரியை அர்பிதாவை காரில் கடத்திச் சென்றுள்ளனர். இது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார், ஆசிரியை கடத்தல் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே, அர்பிதா தங்களின் உறவினரான ராமு என்பவரை கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வருவதாகவும், தனது மகளை கடத்திச் சென்ற சம்பவத்தில் ராமுவுக்கு தொடர்பிருக்கலாம் என்று அர்பிதாவின் தாயார் சந்தேகம் தெரிவித்துள்ளார். இதனிடையே, கனகதாச ஜெயந்தியை முன்னிட்டு பள்ளி விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், ஆசிரியை அர்பிதா ஏன் பள்ளிக்கு வந்தார்..? என்ற கேள்வியும் போலீசாரிடையே எழுந்துள்ளது.
எனவே, 3 தனிப்படைகளை அமைத்து, அர்பிதாவை மீட்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திராசு கிராமத்தில் 80 வயது மூதாட்டி இயற்கை உபாதை கழிக்க அருகில் உள்ள…
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பஜார் வீதியில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மற்றும் ஆதிதிராவிடர் நலக்குழு சார்பில்…
பல வருடக் கனவு கடந்த 2016 ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க புதிய கட்டிடத்தின் பணிகள் தொடங்கப்பட்டது. தென்னிந்திய…
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
This website uses cookies.