கர்நாடகாவில் தனியார் பள்ளி ஆசிரியை ஒருவர் பட்டப்பகலில் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹாசன் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் அர்பிதா (23) என்பவர் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இன்று காலை வழக்கம் போல பள்ளிக்கு சென்று கொண்டிருந்த 3 மர்ம நபர்கள், ஆசிரியை அர்பிதாவை காரில் கடத்திச் சென்றுள்ளனர். இது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார், ஆசிரியை கடத்தல் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே, அர்பிதா தங்களின் உறவினரான ராமு என்பவரை கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வருவதாகவும், தனது மகளை கடத்திச் சென்ற சம்பவத்தில் ராமுவுக்கு தொடர்பிருக்கலாம் என்று அர்பிதாவின் தாயார் சந்தேகம் தெரிவித்துள்ளார். இதனிடையே, கனகதாச ஜெயந்தியை முன்னிட்டு பள்ளி விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், ஆசிரியை அர்பிதா ஏன் பள்ளிக்கு வந்தார்..? என்ற கேள்வியும் போலீசாரிடையே எழுந்துள்ளது.
எனவே, 3 தனிப்படைகளை அமைத்து, அர்பிதாவை மீட்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.