சரிகிறது கேசிஆரின் செல்வாக்கு.. 10 வருட பிஆர்எஸ் ஆட்சி முடிவுக்கு வருகிறது : முதன்முறையாக ஆட்சியை பிடிக்கும் காங்கிரஸ்!
கடந்த மாதம் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் மிசோராம் தவிர்த்து சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் , ராஜஸ்தான் , தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட உள்ளது. காலை 8 மணி முதலே தபால் வாக்குகள் எண்ணப்பட்டு , அதன்பிறகாக வாக்கு எண்ணிக்கை தொடங்கி உள்ளது .
இதில் காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் பாஜக முன்னிலை பெற்று வருகிறது. காங்கிரஸ் ஆளும் இன்னொரு மாநிலமான சத்தீஸ்கரில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமையும் நிலை உருவாகி வருகிறது. மத்திய பிரதேசத்தில் ஆளும் பாஜக மீண்டும் ஆட்சியை தக்கவைக்கும் என முன்னிலை நிலவரங்கள் கூறுகின்றன.
தெலுங்கானாவில் , தனி மாநிலம் அறிவிக்கப்பட்டதில் இருந்து கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி பொறுப்பில் இருக்கும் சந்திரசேகர ராவின் , பாரதிய ராஷ்டிரிய சமிதி (BRS) கட்சி மீண்டும் முன்னிலை பெற்று கேசிஆர் “ஹாட்ரிக்” அடித்து முதல்வராவார் என கூறப்பட்டு வந்த நிலையில், கே.சி.ஆர், தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகாளான கஜ்வெல் (Gajwel ) மற்றும் காமரெட்டி (Kamareddy) ஆகிய தொகுதிகளில் பின்னடைவை சந்தித்து வருகிறார் என்ற நிலவரம் வெளியாகியுள்ளது.
மொத்தமும் 119 தொகுதிகளில் 66 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை பெற்று முதன்முறையாக ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. ஆளும் பிஆர்எஸ் கட்சி 41 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்று வருகிரது. ஒன்பது தொகுதியில் பாஜக முன்னிலை பெற்று வருகிறது. இதே நிலை தொடர்ந்தால் 10 ஆண்டுகால பிஆர்எஸ் கட்சியின் ஆட்சி இந்த தேர்தலில் முடிவுக்கு வந்துவிடும்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.