கேரளாவில் படகு கவிழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டம், தானூரை அடுத்த ஓட்டுப்புறம் தூவல் தீரம் பகுதியில், கடந்த மே மாதம் 8ம் தேதி படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 15 குழந்தைகள் உள்பட 22 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
அனுமதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கையை விட, 40க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் ஒரு படகில் பயணம் மேற்கொண்டதால், பாரம் தாளாமல் இந்த விபத்து ஏற்பட்டது. இது தொடர்பாக படகு உரிமையாளர் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில், கோட்டயம் அருகே படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் நிகழ்ந்துள்ளது. உதனாபுரம் பகுதியைச் சேர்ந்த சரத் என்பவர் உறவினரின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக, தனது குடும்ப உறுப்பினர்கள் 6 பேருடன் வைக்கம் நோக்கி படகில் சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக படகு கவிழ்ந்ததில், சரத் மற்றும் அவரது சகோதரியின் மகன் ஆகியோர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். எஞ்சிய 4 பேரை அப்பகுதியினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
கேரளாவில் அடுத்தடுத்து படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.