கேரளாவில் படகு கவிழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டம், தானூரை அடுத்த ஓட்டுப்புறம் தூவல் தீரம் பகுதியில், கடந்த மே மாதம் 8ம் தேதி படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 15 குழந்தைகள் உள்பட 22 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
அனுமதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கையை விட, 40க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் ஒரு படகில் பயணம் மேற்கொண்டதால், பாரம் தாளாமல் இந்த விபத்து ஏற்பட்டது. இது தொடர்பாக படகு உரிமையாளர் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில், கோட்டயம் அருகே படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் நிகழ்ந்துள்ளது. உதனாபுரம் பகுதியைச் சேர்ந்த சரத் என்பவர் உறவினரின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக, தனது குடும்ப உறுப்பினர்கள் 6 பேருடன் வைக்கம் நோக்கி படகில் சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக படகு கவிழ்ந்ததில், சரத் மற்றும் அவரது சகோதரியின் மகன் ஆகியோர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். எஞ்சிய 4 பேரை அப்பகுதியினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
கேரளாவில் அடுத்தடுத்து படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.