கேரளாவில் கவனக்குறைவாக சாலையை கடக்க முயன்ற சைக்கிளில் வந்த நபர் மீது அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளான அதிர்ச்சி சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் பெரும்பாவூர் பகுதியில் உள்ள சாலையில் (கேரளா அரசு பேருந்து) கேஎஸ்ஆர்டிசி பேருந்து சாலையில் சென்று கொண்டிருக்கும் போது, இணைப்பு சாலையில் இருந்து சைக்கிளில் வந்த ஒருவர் சைக்கிளில் சாலையை கவனக்குறைவாக கடந்தார். அப்போது, எதிரே வந்த கேரளா அரசு பேருந்து மோதியது.
அதில் அவர் பலத்த காயம் அடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் காணப்பட்ட அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து கேரளா காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து குறித்த காட்சிகள் சிசிடியில் பதிவாகி உள்ளது. அதில் சைக்கிள் ஓட்டுபவர் கவன குறைவாக சாலையை கடக்கும் போது, தனது கையால் பேருந்தை நிறுத்தச் சொன்னார். ஆனால் பஸ் டிரைவர் கவனிக்கவில்லை. அதிவேகமாக வந்த KSRTC பேருந்து இருசக்கர வாகன ஓட்டி மீது மோதியது சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் பதிவாகியுள்ளன.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.