கேரளா : கேரளாவில் பக்கவாட்டு சாலையில் திரும்ப முயன்ற இருசக்கர வாகனத்தையும், அதில் பயணித்த இருவர்களையும், பின்னால் இருந்து அதிகவேகத்தில் வந்த கார் இடித்து பறக்க விடும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.
மலப்புறம் , குளப்புறம் சாலையில் திருவரங்காடி பகுதியில் வைத்து நேற்று இரவு அளவில் பிலாக்கல் பகுதியில் இருந்து அதிவேகத்தில் வந்த கார் ஒன்று, பக்கவாட்டு சாலையில் திரும்ப முயன்ற இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதியுள்ளது.
இதில் இருசக்கர வாகனத்தில் பயணித்த இருவர் சாலையில் தூக்கி வீசப்பட்டதுடன், இவர்களது வாகனமும் பல அடிதூரம் பறந்து சென்று விழுந்துள்ளது. இருசக்கர வாகனத்தில் மோதியதில் கட்டுப்பாட்டை இழந்த கார் சில அடி தூரம் முன்பே சென்று சாலையோர பள்ளத்திலும் சிக்கி இடித்து நின்றது.
இந்த விபத்தில் காயம் அடைந்த மூவரையும் அப்பகுதி பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக திருவரங்காடி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த விபத்து குறித்து குளப்புறம் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.
தமிழக வெற்றி கழக தலைவரும் நடிகருமான விஜய்க்கு மத்திய அரசு உய்ப்பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது. இந்த நிலையில் அவருக்கு சிஆர்பிஎப்…
காமெடி நடிகர் கவுண்டமணியின் மனைவி திடீரென உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் ஆணித்தரமான கருத்துக்களை காமெடி மூலமாக கொண்டு…
கமல்ஹாசனா இப்படி செய்தது? தனது உலக நாயகன் என்ற பட்டத்தை துறந்தாலும் இன்னும் அவரது ரசிகர்களின் மனதில் உலக நாயகனாகவே…
பொதுவெளியில் பிரபலங்களுக்கு திடீரென சங்கடங்கள் ஏற்படுவது வழக்கம்தான். ஆனால் ஒரு சிலர் அணிந்து வரும் ஆடையும் அப்படி சங்கடத்தை ஏற்படுத்திவிடுகிறது.…
கிரிக்கெட் ஜாம்பவனாக வலம் வருவபர் முன்னாள் இந்திய அணி கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். இவரது மகன் அர்ஜூன் ஒரு…
This website uses cookies.