கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே நெல்லிக்குழி திருமண நிகழ்ச்சிக்கு கேரள அரசு பேருந்து அலங்கரித்து சென்ற விவகாரம் தொடர்பாக, ஓட்டுநரின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து வட்டார போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், கண்ணாடியை மறைத்து வாழை தோரணங்கள் கட்டியதால் ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் குறைந்த செலவில் சுற்றுலா திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு அரசு பேருந்து இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்றைய தினம் எர்ணாகுளம் அருகே நெல்லிக்குழி பகுதியில் இருந்து இடுக்கி மாவட்டம் அடிமாலி பகுதிக்கு திருமணத்திற்கு செல்ல மணமகன் வீட்டார் அரசு பேருந்து ஒன்றை வாடகைக்கு எடுத்தனர்.
இதனை தொடர்ந்து பேருந்து முழுவதும் வாழை தோரணங்களால் அலங்கரித்து சென்றனர். இந்த காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலான நிலையில் இன்றைய தினம் ஓட்டுநரின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து வட்டார போக்குவரத்து துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.
மேலும், கண்ணாடியை மறைத்து வாழை தோரணங்கள் கட்டியதால் பாதுகாப்பு கேள்வி குறி ஏற்பட்டுள்ளதாக கூறி ஓட்டுநர் மீது காவல் துறையும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.