கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே நெல்லிக்குழி திருமண நிகழ்ச்சிக்கு கேரள அரசு பேருந்து அலங்கரித்து சென்ற விவகாரம் தொடர்பாக, ஓட்டுநரின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து வட்டார போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், கண்ணாடியை மறைத்து வாழை தோரணங்கள் கட்டியதால் ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் குறைந்த செலவில் சுற்றுலா திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு அரசு பேருந்து இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்றைய தினம் எர்ணாகுளம் அருகே நெல்லிக்குழி பகுதியில் இருந்து இடுக்கி மாவட்டம் அடிமாலி பகுதிக்கு திருமணத்திற்கு செல்ல மணமகன் வீட்டார் அரசு பேருந்து ஒன்றை வாடகைக்கு எடுத்தனர்.
இதனை தொடர்ந்து பேருந்து முழுவதும் வாழை தோரணங்களால் அலங்கரித்து சென்றனர். இந்த காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலான நிலையில் இன்றைய தினம் ஓட்டுநரின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து வட்டார போக்குவரத்து துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.
மேலும், கண்ணாடியை மறைத்து வாழை தோரணங்கள் கட்டியதால் பாதுகாப்பு கேள்வி குறி ஏற்பட்டுள்ளதாக கூறி ஓட்டுநர் மீது காவல் துறையும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.