திருவனந்தபுரம் ; கேரளாவில் கள்ளக்காதலனால் பிறந்த குழந்தையை பெற்ற தாயே கை, கால்களை வெட்டி கொலை செய்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
திருவனந்தபுரம் அருகே அஞ்சுதெங்கு கிராமப் பகுதியில் உள்ள கடற்கரையில் பிறந்த குழந்தையின் உடல் ஒன்று கை, கால்கள் உடைந்த நிலையில் ஒதுங்கியது. இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், குழந்தையின் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில், மீட்கப்பட்ட குழந்தையின் உடல், அஞ்சுதெங்கு பகுதியை சேர்ந்த ஜூலி என்ற பெண்ணின் குழந்தை என தெரியவந்தது.
இதையடுத்து, ஜுலியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில், பல திடுக்கிடும் தகவல் வெளியானது. 12 ஆண்டுகளுக்கு முன்பு கணவரை இழந்த ஜூலிக்கு, அதே பகுதியை சேர்ந்த இளைஞரிடம் தகாத உறவு இருந்து வந்துள்ளது.
தகாத உறவின் மூலும் கர்ப்பம் தரித்து குழந்தை பிறந்ததாகவும், அக்கம்பக்கத்தினருக்கு தெரியவந்தால் அவதூறாக பேசுவார்கள் எனப் பயந்து, குழந்தையின் மூச்சை அடக்கி கொன்றது தெரிய வந்தது. அதுமட்டுமல்லாமல், உயிரிழந்த குழந்தையின் கை, கால்களை உடைத்து, வீட்டிலேயே புதைத்ததும், 2 நாட்களுக்குப் பிறகு புதைக்கப்பட்ட உடலை தோண்டி எடுத்து கடற்பகுதியில் வீசியதும் விசாரணையில் அம்பலமானது. இதையடுத்து, ஜூலியை போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.