கேரளாவில் ஆபரேஷன் தியேட்டரில் மருத்துவரும் நோயாளியும் தமிழ் பாடல் பாடிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி பொதுமக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே பரோக் பகுதியில் அரசு தாலுகா மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு எலும்பு அறுவை சிகிச்சை மருத்துவராக பணியாற்றி வரும் முகம்மது ரயீஸ் என்ற மருத்துவர், 14 வயதான சிறுமிக்கு காலில் சிறு அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.
அப்போது, சிறுமியிடம் வலி உள்ளதா என்று கேட்டார். வலிப்பதாக சிறுமி கூறியபோது, அவரை வலி மறந்து மனதை வருடும் வகையில், மருத்துவர் ஓர் தமிழ் பாடலை பாடினார்.
அர்ஜுன் நடித்த கர்ணா திரைப்படத்தில் வரும் மலரே மவுனமா என்ற பாடல் ஆகும். அந்த பாடலைக் கேட்ட அந்த சிறுமி, தனக்கும் அந்தப் பாடல் நன்கு தெரியும் என்பதால் அவரும் பாடினார். இருவரும் பாடிய காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி பொதுமக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.