கேரள மாநிலம் மலப்புறத்தில் தென்னை மரம் முறிந்து விழுந்து ரீல்ஸ் எடுக்க முயற்சித்த இளைஞர்கள் காயமடைந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டத்திற்கு உட்பட்ட காளி காவு பகுதியில் உள்ள ஆற்றிற்கு அருகில் உள்ள தென்னை மரம் தண்ணீருக்கு மேலே சாய்வாக நின்றது. இதனால், இங்கு வரும் இளைஞர்கள், தென்னை மீது ஏறி ஆற்றில் குதித்து மகிழ்வது வழக்கம்.
இந்த நிலையில், ஏழு இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்வதற்காக ரீல் தயாரிக்கும் நோக்கில் சாய்வாக நின்று கொண்டிருந்த தென்னை மீது ஏறி அமர்ந்து இருந்தனர்.
அப்போது, எதிர்பாராத விதமாக தென்னை மரம் முறிந்து ஆற்றுக்குள் விழுந்தது. இதனால், தென்னை மீது அமர்ந்திருந்த நான்கு இளைஞர்கள் தண்ணீரில் விழுந்து காயமடைந்தனர். உடனடியாக அவர்களை தனியார் மருத்துவமனையில் பகுதியினர் அனுமதித்தனர்.
அதிக அளவில் தண்ணீர் காணப்பட்டதால் தென்னைமரம் முறிந்த போது கீழே விழுந்தவர்கள் பெரிய அளவிலான பாதிப்பு ஏதும் இல்லாமல் தப்பினர். தென்னை மரம் முறிந்து விழும் காட்சி தற்போது சமூக வலைத்தளங்களை வைரலாகி வருகிறது.
படுதோல்வியடைந்த சிக்கந்தர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் கடந்த மார்ச் மாதம் வெளியான “சிக்கந்தர்”…
காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான நவமணி வயது 31 என்பவர் அதே பகுதியில் ஒன்பதாம்…
மாறன் குடும்பத்தில் ஏற்பட்ட புகைச்சல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சன் டிவி பங்கு தொடர்பாக கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன்…
வெளியானது குபேரா தனுஷ் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் “குபேரா”. இத்திரைப்படத்தில் தனுஷுடன் நாகர்ஜுனா,…
சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா…
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
This website uses cookies.