கேரள மாநிலம் மலப்புறத்தில் தென்னை மரம் முறிந்து விழுந்து ரீல்ஸ் எடுக்க முயற்சித்த இளைஞர்கள் காயமடைந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டத்திற்கு உட்பட்ட காளி காவு பகுதியில் உள்ள ஆற்றிற்கு அருகில் உள்ள தென்னை மரம் தண்ணீருக்கு மேலே சாய்வாக நின்றது. இதனால், இங்கு வரும் இளைஞர்கள், தென்னை மீது ஏறி ஆற்றில் குதித்து மகிழ்வது வழக்கம்.
இந்த நிலையில், ஏழு இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்வதற்காக ரீல் தயாரிக்கும் நோக்கில் சாய்வாக நின்று கொண்டிருந்த தென்னை மீது ஏறி அமர்ந்து இருந்தனர்.
அப்போது, எதிர்பாராத விதமாக தென்னை மரம் முறிந்து ஆற்றுக்குள் விழுந்தது. இதனால், தென்னை மீது அமர்ந்திருந்த நான்கு இளைஞர்கள் தண்ணீரில் விழுந்து காயமடைந்தனர். உடனடியாக அவர்களை தனியார் மருத்துவமனையில் பகுதியினர் அனுமதித்தனர்.
அதிக அளவில் தண்ணீர் காணப்பட்டதால் தென்னைமரம் முறிந்த போது கீழே விழுந்தவர்கள் பெரிய அளவிலான பாதிப்பு ஏதும் இல்லாமல் தப்பினர். தென்னை மரம் முறிந்து விழும் காட்சி தற்போது சமூக வலைத்தளங்களை வைரலாகி வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.