தெலுங்கானாவில் சுமார் நூறு பேர் கொண்ட கும்பல் வீடு புகுந்து சகட்டுமேனிக்கு தாக்குதல் நடத்தி பல் மருத்துவரை கடத்தி சென்று அட்டூழியம்.
தெலுங்கானா மாநிலம் அதிலாபாத் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசிப்பவர் தாமோதர் ரெட்டி. அவருடைய மகள் வைஷாலி.பல் மருத்துவரான வைசாலிக்கு சில நாட்களில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் இன்று மாலை 100 பேர் கொண்ட அடியாள் கும்பலுடன் தாமோதர் ரெட்டி வீட்டுக்கு வந்த நவீன் ரெட்டி என்பவர் அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களின் கண்ணாடிகளை அடித்து உடைத்தார்.
பின்னர் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களையும் அடித்து உடைத்து சேதப்படுத்தினார். தொடர்ந்து தாமோதர் ரெட்டி அவருடைய மனைவி மற்றும் வீட்டிலிருந்த குடும்ப உறுப்பினர்கள் ஆகியோரையும் சகட்டுமேனிக்கு தாக்கிய அந்த கும்பல் பல் மருத்துவரான வைசாலியை பலவந்தமாக காரில் ஏற்றி கடத்தி சென்றது.
இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் பற்றி வைசாலியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
போலீசார் வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருக்கும் காட்சிகளை கைப்பற்றி நவீன் ரெட்டி மற்றும் கடத்தல் கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் தங்கள் மகளை மீட்டு கொடுக்க வேண்டும் என்று வைசாலியின் பெற்றோர் போலிஸ் அதிகாரிகளின் காலில் விழுந்து கதறி அழுதனர்.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.