ஆந்திரா : லேப்டாப்பில் இருந்து மின்சாரம் பாய்ந்து தனியார் ஐடி நிறுவன பெண் ஊழியர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள மேக்கவாரி கிராமத்தை சேர்ந்தவர் சுமலதா. பெங்களூரில் உள்ள தனியார் ஐடி நிறுவனம் ஒன்றில் பொறியாளராக பணி செய்து வரும் அவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக ஒர்க் ப்ரம் ஹோம் அடிப்படையில் வீட்டிலிருந்தபடியே வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில், நேற்று காலை தன்னுடைய லேப்டாப்பை சார்ஜ் போட்ட நிலையில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று லேப்டாப் சார்ஜ் 10 சதவீதத்திற்கும் குறைந்து அதிலிருந்து ஹை வோல்டேஜ் மின்சாரம் சுமலதா மீது பாய்ந்தது. இதனால் சுமார் 40 சதவீதம் அளவிற்கு தீக்காயமடைந்த சுமலதாவை, பெற்றோர் ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. சுமலதாவை அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக கூறியுள்ளனர்.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.