ஆந்திரா : மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட விரிவுரையாளருக்கு உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் தர்ம அடி கொடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.
ஆந்திர மாநில சித்தூர் மாவட்டம் சித்தூரில் உள்ள ஆர்.கே.எஸ்.ஆர் ஜூனியர் கல்லூரியில் மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட கல்லூரி விரிவுரையாளருக்கு பெற்றோர் மற்றும் உறவினர்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் நேற்று நடந்துள்ளது.
கல்லூரியில் இயற்பியல் பாடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் விரிவுரையாளராக பணியாற்றிவரும் சோமையா என்பவர் மாணவி ஒருவரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
மாணவி இதுகுறித்து பெற்றோருக்கு புகார் தெரிவித்ததையடுத்து நேற்று கல்லூரிக்கு வந்த மாணவியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சோமயாவை கல்லூரி முதல்வர் பாலசுப்ரமணியம் பார்த்துக்கொண்டிருக்கும்போதே கடுமையாக மாறி மாறி தாக்கத் தொடங்கினர். இதனால் கல்லூரியில் சிறிது நேரம் பதட்டம் நிலவியது.
இதைத்தொடர்ந்து மாணவியின் பெற்றோர் கல்வி கற்பிக்க வேண்டிய பணியில் இருப்பவர்கள் பாலியல் சீண்டல் ஈடுபடுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் சோமயாவை உடனே பணிநீக்கம் செய்து தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கல்லூரி முதல்வருக்கு கோரிக்கை விடுத்து சென்றனர்.
இந்த தாக்குதல் சம்பந்தப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பாடம் நடத்த வேண்டிய ஆசிரியரே பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…
This website uses cookies.