இந்தியா

ரூ.2 கோடி கேட்டு மீண்டும் சல்மான் கானுக்கு மிரட்டல்!

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானிடம் ரூ.2 கோடி கேட்டு கொலை மிரட்டல் வந்துள்ளது தொடர்பாக போலீசார் விசாரணையைத் துவக்கி உள்ளனர்.

மும்பை: கடந்த அக்டோர் 12ஆம் தேதி நடைபெற்ற தசரா கொண்டாட்டத்தின் போது, தேசியவாத காங்கிரஸ் தலைவர் பாபா சித்திக், அவரது மகனும், எம்எல்ஏவுமான ஜீஷன் சித்திக்கின் அலுவலகத்துக்கு முன்பாக பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென சுட்டுக் கொல்லப்பட்டார். இவ்வாறு பாபா சித்திக் கொல்லப்பட்ட மறுநாள், அவரது கொலைக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுக் கொண்டது.

இதற்கும், சல்மான் கானுடன் நெருங்கிப் பழகியதால் அவர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், நேற்றைய முன்தினம், சல்மான் கான் மற்றும் எம்எல்ஏ ஜீஷன் சித்திக் ஆகியோருக்கு கொலை மிரட்டல் வந்தது. அப்போது, தான் கேட்ட பணத்தைக் கொடுக்கவில்லை என்றால், சல்மான் கான் மற்றும் ஜீஷன் சித்திக் ஆகிய இருவரையும் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுக்கப்பட்டது.

பின்னர், இது தொடர்பாக, 20 வயதான முகம்மது தயாப் என்ற இளைஞர் நேற்று காலை நொய்டாவின் செக்டார் 39 பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார். குர்பான் கான் என அழைக்கப்படும் இவரிடம் மும்பை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், இன்று (அக்.30) மீண்டும் மும்பை போக்குவரத்து போலீசாருக்கு கொலை மிரட்டல் அழைப்பு வந்து உள்ளது.

இந்த மிரட்டல் அழைப்பில் பேசிய மர்ம நபர், 2 கோடி ரூபாய் தரவில்லை என்றால், சல்மான் கானை கொன்று விடுவேன் என மிரட்டி உள்ளார். பின்னர், இது தொடர்பாக அடையாளம் தெரியாத நபர் மீது வழக்குப் பதிவு செய்த மும்பை வோர்லி போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வாறு அடுத்தடுத்த இரண்டு நாட்களில் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் வந்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க : தீபாவளியைக் கொண்டாட முடியுமா? 15 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு!

முன்னதாக, கடந்த 2022ஆம் ஆண்டு சல்மான் கானின் வீட்டுக்கு அருகில் மிரட்டல் கடிதம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. பின்னர், 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம், கோல்டி ப்ரார் சல்மானுக்கு கொலை மிரட்டல் மின்னஞ்சல் வந்ததாக தகவல் வெளியானது. அதேபோல், இந்த ஆண்டு பன்வேலியில் உள்ள சல்மான் கானின் பண்ணை வீட்டில் போலி அடையாளங்கள் உடன் 2 பேர் ஊடுருவ முயன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Hariharasudhan R

Share
Published by
Hariharasudhan R

Recent Posts

இனி திமுகவின் பண பலம், அதிகார பலம் எடுபடாது… 234 தொகுதியிலும் அதிமுகதான் : முன்னாள் அமைச்சர் உறுதி!

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…

6 hours ago

ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…

7 hours ago

முதலமைச்சர் போட்ட டெல்டாக்காரன் வேஷம் பல் இளிக்கிறது அண்ணாமலை விமர்சனம்!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…

7 hours ago

அஜித்தின் அடுத்த படம்! தனது சம்பளத்தை எக்குத்தப்பாக ஏற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்? அடேங்கப்பா!

ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

8 hours ago

மீசையை முருக்கி பேசுவேன் என திருமா கூறியுள்ளார்.. அதற்காக காத்திருக்கிறோம் : அண்ணாமலை!

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…

8 hours ago

முதல் திருமணத்தை மறைத்து பல லட்ச ரூபாய் மோசடி!  “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” நடிகையின் கைவரிசை?

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்  “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…

9 hours ago

This website uses cookies.