வங்கி கணக்கை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என தொடர்ந்து மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில், 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் பணியாளர்களில், 42 லட்சத்துக்கும் அதிகமானோர் ஆதார் எண்ணை கொண்டு பணம் வழங்கும் திட்டத்தின் (AEPS) கீழ் தங்களை இணைத்துக் கொள்ளவில்லை என்றும், எதிர்வரும் மார்ச் 31ம் தேதிக்குள் கட்டாயம் இணைக்க வேண்டும் என்றும் மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் தெரிவித்தார்.
முன்னதாக, நேற்றைய மாநிலங்களவையின் கேள்வி நேரத்தின் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே 100 நாள் வேலைத் திட்ட ஊதிய செயல்முறைகள் குறித்து கேள்வி எழுப்பினார்.
இதுதொடர்பாக கார்கே முன்வைத்த கேள்விகள்,
100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் ஊதியம் பெற ஆதார் எண்ணை கொண்டு பணம் செலுத்தும் முறைகள் (ABPS) கட்டாயமாக்கப்பட்டுள்ளதா?
மாநில வாரியாக ABPS முறையின் கீழ் இணைக்கப்பட்ட, இணைக்கப்படாத பணியாளர்களின் எண்ணிக்கை விவரங்கள் தருக?
ABPS முறையின் கீழ் வராததால் ஊதியம் மறுக்கப்பட்ட பணியாளர்களின் எண்ணிக்கை விவரங்களைத் தருக?
100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் ஊதியம் பெற ABPS முறையை கட்டாயமாக்குவதற்கான காரணங்களைத் தருக?
ABPS முறையினால் ஏற்படும் பிரச்சனை மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகளை அரசாங்கம் கவனத்தில் கொண்டுள்ளதா? அப்படியானால், அதன் விவரங்கள் தருக ” ஆகிய கேள்விகளை எழுப்பியிருந்தார்.
இந்த கேள்விக்கு எழுத்துப் பூர்வமாக பதில் அளித்த ஊரக மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் நிரஞ்சன் ஜோதி, “
100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் ஊதியம் பெற, ஆதார் எண்ணை கொண்டு பணம் செலுத்தும் முறைகள் (AEPS) கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மாநிலங்கள் வாரியாக AEPS முறையின் கீழ் இணைக்கப்பட்ட/ இணைக்கப்படாத பணியாளர்கள் பட்டியலைப் பொறுத்த வரையில், உத்தரபிரதேசம், பிகார், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் 1 கோடிக்கும் அதிகமான பணியாளர்கள் AEPS முறையின் கீழ் வரவில்லை.
தமிழ்நாட்டில், 42 லட்சத்துக்கும் அதிகமானோர் (42,88,339) ஆதார் எண்ணை கொண்டு பணம் வழங்கும் திட்டட்தின் (AEPS) கீழ் தங்களை இணைத்துக் கொள்ளவில்லை என்று தெரிவித்தார்.
ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…
நீண்ட இடைவெளிக்குப் பின் பேட்டி… அஜித்குமார் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்த ஊடகங்களுக்கும் பேட்டிக்கொடுக்கவில்லை. அதே போல் எந்த சினிமா…
பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…
பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…
கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…
உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…
This website uses cookies.