எல்கேஜி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி முதல்வரின் கார் டிரைவருக்கு தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த பெற்றோர்.
தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள பஞ்சாரா ஹில்ஸ் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் செயல்படும் தனியார் பள்ளி முதல்வரின் கார் ஓட்டுநராக பணிபுரிபவர் ரஜினிகுமார்.
ஓட்டுநர் ரஜினி குமார் பள்ளியில் படிக்கும் சிறுமிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்ததாக தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் அதே பள்ளியில் எல்கேஜி படிக்கும் சிறுமி ஒருவரின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டதை கவனித்த பெற்றோர் அந்த சிறுமியை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
நேற்று பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுமி சோர்வாக காணப்பட்டார். அவரிடம் பெற்றோர் நடத்திய விசாரணையின் போது டிரைவர் ரஜினி குமார் சிறுமியிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
மேலும் கடந்த இரண்டு மாதமாக ரஜினி குமார் அந்த சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதும் தெரிய வந்தது. இன்று காலை பள்ளிக்கு வந்த சிறுமியின் பெற்றோர் டிரைவர் ரஜினி குமாரை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
டிரைவர் ரஜினி குமார் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
வேலூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுகுழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் மாவட்டத்தலைவர் வெங்கடேசன்,…
This website uses cookies.