எல்கேஜி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி முதல்வரின் கார் டிரைவருக்கு தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த பெற்றோர்.
தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள பஞ்சாரா ஹில்ஸ் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் செயல்படும் தனியார் பள்ளி முதல்வரின் கார் ஓட்டுநராக பணிபுரிபவர் ரஜினிகுமார்.
ஓட்டுநர் ரஜினி குமார் பள்ளியில் படிக்கும் சிறுமிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்ததாக தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் அதே பள்ளியில் எல்கேஜி படிக்கும் சிறுமி ஒருவரின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டதை கவனித்த பெற்றோர் அந்த சிறுமியை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
நேற்று பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுமி சோர்வாக காணப்பட்டார். அவரிடம் பெற்றோர் நடத்திய விசாரணையின் போது டிரைவர் ரஜினி குமார் சிறுமியிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
மேலும் கடந்த இரண்டு மாதமாக ரஜினி குமார் அந்த சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதும் தெரிய வந்தது. இன்று காலை பள்ளிக்கு வந்த சிறுமியின் பெற்றோர் டிரைவர் ரஜினி குமாரை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
டிரைவர் ரஜினி குமார் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விஜய்யின் கடைசி திரைப்படம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் 2026 ஆம் ஆண்டு…
குப்பைக்கு உள்ள மரியாதை கூட எங்களுக்கு இல்லை. தூய்மை பணியாளரின் துயரம் வருட கணக்கில் நடக்கும் போராட்டம் விடியல் தருமா…
நடிகர் அஜித் பத்மபூஷன் விருதுடன் நேற்று சென்னை திரும்பிய நிலையில் இன்று அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் கடந்த 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய தமிழக அரசு, அந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கோவையில்…
நயன்தாரா தொடர்ந்து தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். கட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக மார்க்கெட் இறங்காமல் ஏறுமுகமாகவே இருக்கிறார்.…
This website uses cookies.