ஆந்திராவில் காட்டாற்று வெள்ளத்தின் போது தரைப்பாலத்தை கடக்க முயன்ற ராட்சத லாரி தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள புக்கராய சமுத்திரம் அருகே இருக்கும் ஏரி சமீபத்தில் பெய்த மழை காரணமாக நிரம்பி வழிகிறது. இதனால், ஏரியில் இருந்து வெளியாகும் தண்ணீர் காட்டாறு ஒன்றின் வழியாக பாய்ந்து ஓடுகிறது.
இந்த நிலையில், தரைப்பாலம் ஒன்றின் மீது வழிந்து ஓடும் காட்டாற்று வெள்ளத்தை கடந்து செல்ல கலவை இயந்திரத்துடன் கூடிய ராட்சத லாரி ஒன்று முயன்றது. அப்போது, வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட லாரி கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக லாரி டிரைவர், கிளீனர் ஆகியோர் லாரியிலிருந்து இறங்கி நீந்தி உயிர் தப்பினர்.
இது பற்றிய தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று லாரியை மீட்க முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.