பிரதமர் மோடி மற்றும் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி எடுத்துக்கொண்ட செல்பி குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் சுப்பிரமணிய சுவாமி போட்ட பதிவு பெரும் சர்ச்சையாகியுள்ளது.
COP28 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி துபாய்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதேபோல, இந்த மாநாட்டில் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி உள்பட பல்வேறு நாட்டு பிரதமர்களும் கலந்து கொண்டுள்ளனர். இந்த மாநாட்டின் போது, அனைத்து நாட்டு பிரதமர்களும் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர். மேலும், செல்பியும் எடுத்துக் கொண்டனர்.
அந்த வகையில், இந்திய பிரதமர் மோடியும், இத்தாலிய பிரதமர் மெலோனியும் சந்தித்து செல்பி எடுத்துக் கொண்டனர். ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஜி20 மாநாட்டின் போது இந்த இரு தலைவர்களும் சிரித்து பேசி வார்த்தை பரிமாற்றங்கள் கொண்டனர்.
தற்போது, COP28 மாநாட்டிலும் இருவரும் சிரித்து புகைப்படம் எடுத்துக் கொண்ட குறித்து பலரும பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வந்தனர். அதோடு, Meloni மற்றும் Modi பெயரை இணைத்து Melody எனும் ஹேஷ்டேக்கை இத்தாலி பிரதமர் பதிவிட்டிருந்ததும் பெரும் விவாதப் பொருளாகியுள்ளது.
இந்த நிலையில், பிரதமர் மோடி மற்றும் இத்தாலி பிரதமர் மெலோனியின் செல்பி புகைப்படத்தை பகிர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுப்பிரமணிய சுவாமி, இருவரும் made for each other என பதிவிட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக X தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது :- இந்தியாவுக்கு கிடைத்த மற்றொரு இத்தாலி..? ஏற்கனவே இருப்பவர் கணவனை இழந்தவர். தற்போதை நபர் கணவனை விவகாரத்து செய்தவிட்டு பிரதமரானவர். நம்ம பிரதமரோ மனைவியை ஒதுக்கி வைத்தவர். எனவே, made for each other,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
சுப்ரமணியன் சுவாமியின் இந்தப் பதிவு பெரும் சர்ச்சையையும், விவாதத்தையும் எழச் செய்துள்ளது.
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
This website uses cookies.