தங்களின் 18 வயது மகளையும், அவரது காதலனையும் கொடூரமாக கொலை செய்து, முதலைகள் இருக்கும் ஆற்றில் இருவரின் சடலங்களையும் பெண்ணின் பெற்றோர் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசம் மொரேனாவில் ரத்தன்பாசி கிராமத்தைச் சேர்ந்தவர் ஷிவானி தோமர் (18). இவர் அருகில் உள்ள பலுபு கிராமத்தைச் சேர்ந்த ராதிஷ்யம் தோமர் (21) என்னும் வாலிபரை காதலித்து வந்தார். ஷிவானியின் காதலுக்கு அவரது பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், கடந்த ஜுன் 3ம் தேதி ராதிஷ்யமையும், ஷிவானியையும் காணவில்லை. இருவரும் வீட்டை விட்டு ஓடிச் சென்று திருமணம் செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. இதனால், ராதிஷ்யமின் குடும்பத்தினர் போலீஸில் புகார் அளித்தனர். அதன்பேரில், விசாரணை நடத்திய போலீசாருக்கு அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது.
அதாவது, ஷிவானியின் தந்தையிடம் நடத்திய விசாரணையில், தனது மகளையும், அவரது காதலனையும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். கடந்த ஜூன் 3ம் தேதி இருவரையும் சுட்டுக் கொலை செய்து விட்டு, அவர்களின் உடலில் பெரிய கற்களைக் கட்டி, முதலைகள் நிறைந்த சம்பல் ஆற்றில் வீசியதாகவும் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2000க்கும் மேற்பட்ட முதலைகள் இருக்கும் சம்பல் ஆற்றில் இருவரின் உடல்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.