தங்களின் 18 வயது மகளையும், அவரது காதலனையும் கொடூரமாக கொலை செய்து, முதலைகள் இருக்கும் ஆற்றில் இருவரின் சடலங்களையும் பெண்ணின் பெற்றோர் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசம் மொரேனாவில் ரத்தன்பாசி கிராமத்தைச் சேர்ந்தவர் ஷிவானி தோமர் (18). இவர் அருகில் உள்ள பலுபு கிராமத்தைச் சேர்ந்த ராதிஷ்யம் தோமர் (21) என்னும் வாலிபரை காதலித்து வந்தார். ஷிவானியின் காதலுக்கு அவரது பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், கடந்த ஜுன் 3ம் தேதி ராதிஷ்யமையும், ஷிவானியையும் காணவில்லை. இருவரும் வீட்டை விட்டு ஓடிச் சென்று திருமணம் செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. இதனால், ராதிஷ்யமின் குடும்பத்தினர் போலீஸில் புகார் அளித்தனர். அதன்பேரில், விசாரணை நடத்திய போலீசாருக்கு அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது.
அதாவது, ஷிவானியின் தந்தையிடம் நடத்திய விசாரணையில், தனது மகளையும், அவரது காதலனையும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். கடந்த ஜூன் 3ம் தேதி இருவரையும் சுட்டுக் கொலை செய்து விட்டு, அவர்களின் உடலில் பெரிய கற்களைக் கட்டி, முதலைகள் நிறைந்த சம்பல் ஆற்றில் வீசியதாகவும் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2000க்கும் மேற்பட்ட முதலைகள் இருக்கும் சம்பல் ஆற்றில் இருவரின் உடல்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.