இந்தியா

மகாராஷ்டிரா, ஜார்கண்டில் சட்டமன்றத் தேர்தல் எப்போது? ECI அறிவிப்பு!

மகாராஷ்டிராவில் ஒரே கட்டமாகவும், ஜார்கண்ட்டில் இரு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

டெல்லி: டெல்லியில் உள்ள இந்தியத் தேர்தல் ஆணையத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் தேதி மற்றும் நாடு முழுவதும் 48 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் 2 நாடாளுமன்றட் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் தேதியை அறிவித்தனர்.

இதன்படி, மகாராஷ்டிராவில் உள்ள 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவம்பர் 20ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் அக்டோபர் 22ஆம் தேதி தொடங்கி 29ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதன் வாக்கு எண்ணிக்கை நவம்பர் 23ஆம் தேதி நடைபெறும்.

இந்த தேர்தலில் பாஜக, சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ் அடங்கிய ஆளும் மகாயுதிட் கூட்டணியும், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவ சேனா, சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் அடங்கிய மகா விகாஷ் அகாடி கூட்டணியும் மோதுகின்றன.

இதையும் படிங்க: கனடா தூதரை வெளியேற்றும் இந்தியா.. கனடாவின் பதில் என்ன?

அதேபோல், 81 தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இதன்படி, 43 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடைபெறும் முதற்கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 13ஆம் தேதியும், 38 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடைபெறும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 20ஆம் தேதி நடைபெறுகிறது.

இதற்கான வேட்புமனுத் தாக்கல்கள் முறையே அக்டோபர் 18, 22 ஆகிய நாட்களில் தொடங்கி அக்டோபர் 25, 29 ஆகிய நாட்களில் நிறைவடைகிறது. ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான இரண்டு கட்ட வாக்குப்பதிவிலும் பதிவாகும் வாக்குகள் நவம்பர் 23ஆம் தேதி எண்ணப்படுகிறது. இதில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகியவை பிரதான கட்சிகளாக உள்ளன.

Hariharasudhan R

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.