ஆதரவு வாபஸ்… முடிவுக்கு வருகிறது மகாராஷ்டிரா அரசியல் குழப்பம்? நாளை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவு : ஏக்நாத் சொன்ன பதில்!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ்,தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் சிவசேனா கட்சி தலைமையிலான அரசின் ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்த வேளையில், மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக அமைச்சர் ஏக்நாத் சிண்டே உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட சிவசேனா எம்எல்ஏக்கள் முன்னதாக குஜராத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் முகாமிட்டு போர்க்கொடி தூக்கிய நிலையில், தற்போது அசாம் மாநிலத்தில் முகாமிட்டு சிவசேனா அரசுக்கு எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இதனால், ஏக்நாத் சிண்டே உள்ளிட்ட 16 மகாராஷ்டிரா சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனை எதிர்த்து,அதிருப்தி எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்றத்தை நாடினர்.

இதனைத் தொடர்ந்து,மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக அதிருப்தி எம்எல்ஏக்கள் அறிவித்தனர். அதன்படி,தனது தலைமையிலான 38 எம்எல்ஏக்கள் சிவசேனா கூட்டணி அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக ஏக்நாத் சிண்டே உச்சநீதிமன்றத்தில் தகவல் அளித்துள்ளதாக கூறப்பட்டது. இதனால்,சிவசேனா கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது.

இந்நிலையில்,மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க அம்மாநில ஆளுநர் கோஷ்யாரி உத்தரவிட்டுள்ளார்.

நேற்றிரவு மகாராஷ்டிரா ஆளுநரை சந்தித்த பாஜக தலைவர் தேவேந்திர பாட்னாவிஸ் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிக்கை விடுத்திருந்த நிலையில்,முதல்வர் உத்தவ் தாக்கரே சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

அதே சமயம்,நாளை நடைபெறும் நமிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கவுள்ளதாக சிவசேனாவை செர்ந்த அதிருப்தி எம்எல்ஏ ஏக்நாத் சிண்டே பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.