மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா கட்சியின் ஆட்சி கவிழ உள்ள நிலையில், அக்கட்சிக்கு மேலும் ஒரு நெருக்கடி ஏற்பட்டுள்ளது
மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. முதலமைச்சர் உத்தவ் தாக்ரேவுக்கு எதிராக அவரது அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, 40க்கும் மேற்பட்ட அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுடன் அசாம் மாநிலம் கவுகாத்தியில் முகாமிட்டு உள்ளார்.
இதனிடையே, கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளாததால், ஏக்நாத் ஷிண்டே உள்பட 16 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து துணை சபாநாயகரிடம் கடிதம் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, இது தொடர்பாக 16 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கும் துணை சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார்.
இந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டது. இதனால், மகாராஷ்டிரா அரசியலில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது.
இந்த நிலையில், மரகாராஷ்டிராவில் எம்.பி.யும், சிவசேனா செய்தித்தொடர்பாளருமான சஞ்சய் ராவத்திற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. நிலமோசடி வழக்கில் நாளை விசாரணைக்கு ஆஜராகுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மராட்டியத்தில் அரசியல் குழப்பம் நீடித்து வரும் நிலையில், அதிருப்தி எம்எல்ஏக்களை சஞ்சய் ராவத் கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.இது சிவசேனா கட்சியினர் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.