ஆந்திராவில் ஒரு வாக்குச்சாவடியில் எம்எல்ஏ கன்னத்தில் வாக்காளர் ஒருவர் அறைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தெனாலி என்ற தொகுதிக்குட்பட்ட ஒரு வாக்குச்சாவடியில் மக்கள் வாக்களிப்பதற்காக வரிசையில் நின்றிருந்த போது, வாக்களிக்க வந்த எம்எல்ஏ வரிசையில் நிற்காமல் நேராக சென்று வாக்களித்தார்.
அப்போது, வாக்காளர்களில் ஒருவர் வரிசையில் வருமாறு கூறியதால், ஆத்திரமடைந்த எம்எல்ஏ, அந்த நபரை கன்னத்தில் அறைந்தார். உடனே கோபமடைந்த அந்த வாக்காளர், திரும்ப எம்எல்ஏவின் கன்னத்தில் பளார் விட்டார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வாக்காளரை அடித்த எம்எல்ஏ ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் சிவக்குமார் என்றும், அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.