பட்டப்பகலில் அரசுப் பேருந்தில் பயணித்த இளம்நடிகையிடம் இளைஞர் ஒருவர் அந்தரங்க உறுப்பை காண்பித்து சில்மிஷத்தில் ஈடுபட முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருச்சூரில் இருந்து எர்ணாகுளத்திற்கு படப்பிடிப்புக்காக இளம் நடிகை ஒருவர் அரசுப் பேருந்தில் பயணம் செய்துள்ளார். அங்கமாலி என்ற இடத்தில் இளைஞர் ஒருவரும் அந்தப் பேருந்தில் ஏறியுள்ளார். பேருந்தில் பயணிகளின் கூட்டம் இருந்த போதும், அந்த இளைஞர், இளம் நடிகையிடம் தொட்டு தொட்டு பேசியதோடு, அந்தரங்க உறுப்பையும் காட்டியுள்ளார்.
இதனால், அதிர்ச்சியடைந்த அந்த இளம் நடிகை சுதாரித்துக் கொண்டு, அந்த நபரை தனது செல்போனில் படம் பிடிக்க ஆரம்பித்தார். வீடியோ எடுத்தபடி அந்த இளைஞரிடம் கேள்வி கேட்டதும், பேருந்தில் இருந்து இறங்க அவர் முயன்றார்.
பேருந்து நின்றதும் எகிறி குதித்து தப்பியோடிய இளைஞரை, நடத்துனரும், சக பயணிகளும் துரத்திச் சென்று பிடித்து, நெடும்பஞ்சேரி போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், இந்த இளைஞர் கோழிக்கோட்டை சேர்ந்த சவாத் என்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில், தனக்கு நேர்ந்த துயரத்தின் போது உதவிய பேருந்து ஊழியர்கள் மற்றும் சக பயணிகளுக்கு நன்றி தெரிவித்து நடிகை வீடியோ வெளியிட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காட்டை அடுத்த களாம்பாக்கத்தைச் சேர்ந்த வாலிபர் தனுஷ் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விஜயஸ்ரீ ஆகியோர் சமூக வலைதளம்…
பிச்சைக்காரராக தனுஷ் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் இன்று வெளியாகியுள்ள “குபேரா”…
திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக சார்பில் வெங்கத்தூர் கட்சி அலுவலகத்தில்வளர்ந்த இந்தியாவின் அம்ரித் கால் சேவை நல்லாட்சி ஏழைகளின் நலன்11…
தனுஷின் குபேரா சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் உள்ளிட்ட பலரது நடிப்பில் இன்று…
திண்டுக்கல் தாடிக்கொம்பு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் காவல்துறை அனுமதியுடன் கிளர்ச்சி பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதையும் படியுங்க:…
கடலூரில் நடந்த உச்சக்கட்ட கொடூரமான சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூரை சேர்ந்த பாலமுருகன் பச்சையம்மாள் தம்பதிக்கு 2 மகன்,…
This website uses cookies.