வீல் சேரில் வந்த மன்மோகன் சிங்… மனமுறுகி பாராட்டி பேசிய பிரதமர் மோடி : நாடாளுமன்றத்தில் சுவராஸ்யம்!!

வீல் சேரில் வந்த மன்மோகன் சிங்… மனமுறுகி பாராட்டி பேசிய பிரதமர் மோடி : நாடாளுமன்றத்தில் சுவராஸ்யம்!!

கடந்த ஜனவரி மாதம் 31ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த கூட்டத்தொடரானது நாளை வரையில் நடைபெற உள்ளது. இன்று 7வது நாளாக மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலும் வழக்கமான விவாத நிகழ்வுகளுக்கு கூட்டத்தொடர் காலை 11 மணியளவில் தொடங்கியது.

இன்றைய கூட்டத்தொடரில், பதவி காலம் நிறைவடையும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் தாக்கல் செய்தார். மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பிரதமர் மோடிஉரையாற்றினார்

அப்போது அவர் பேசுகையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் பிரதமரும், மாநிலங்களவை உறுப்பினருமான மன்மோகன் சிங் பற்றி பேசினார். அவர் கூறுகையில், மன்மோகன் சிங் அனைவருக்கும் வழிகாட்டியாகவும், உத்வேகம் அளிக்க கூடியராகவும் இருந்துள்ளார். நமது நாட்டின் ஜனநாயகம் பற்றி பேசும் போதெல்லாம், மன்மோகன் சிங்கின் பங்களிப்பு எப்போதும் நினைவில் கொள்ளப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், இன்றைய கூட்டத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் கருப்பு உடை அணிந்து எதோ பேஷன் ஷோவில் பங்கேற்றது போல வந்துள்ளனர். கருப்பு உடை என்பது செழிப்படையும் இந்தியாவிற்கு திருஷ்டி போட்டு போல அமைந்துள்ளளது என்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களை கிண்டல் செய்தார் பிரதமர் மோடி.

இன்றைய நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கும் முன்னரே திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கருப்பு உடை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்திற்கு உரிய அளவிலான பேரிடர் நிவாரண நிதியை மத்திய அரசு கொடுக்கவில்லை என்று போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடதக்கது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

நித்யானந்தா இந்த நாட்டில்தான் இருக்கிறார்- நீதிமன்றத்தில் சீக்ரெட்டை போட்டுடைத்த சீடர்!

2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…

15 hours ago

படம் வெளியாகனும்னா இதை பண்ணிதான் ஆகணும்- ஆமிர்கானுக்கு ஆர்டர் போட்ட சென்சார் போர்டு?

ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…

16 hours ago

ஆங்கிலம் பேசுபவர்களே! இதை எழுதி வச்சிக்கோங்க- சவால் விட்ட அமித்ஷா!

டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…

17 hours ago

தக் லைஃப் படத்துக்கு முட்டுக்கட்டை போட்டால் கிரிமினல் வழக்கு?- உச்சநீதிமன்றம் அதிரடி

தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…

17 hours ago

குபேரா படத்தில் இத்தனை வெட்டுக்களா? படத்தில் அப்படி என்னதான் பிரச்சனை!

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…

18 hours ago

24 மணிநேரமும் டாஸ்மாக், நீ குடிச்சே செத்துப்போ- திமுக முன்னாள் எம்எல்ஏ  சர்ச்சை பேச்சு…

“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…

19 hours ago

This website uses cookies.