ஒருவேளை மீண்டும் மோடி வந்தால்… இனி நீங்கள் வாக்களிக்க போகும் கடைசி தேர்தல் இது : பகீர் கிளப்பும் காங்கிரஸ்!
ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனர் கார்கே பேசியதாவது, பாஜக ஒவ்வொருவருக்கும் அமலாக்கத்துறை மூலம் நோட்டீஸ் அனுப்புகிறது. மத்திய விசாரணை அமைப்புகளை மூலம் மக்களை மிரட்டுகிறது. பயத்தால் சிலர் நட்பை விட்டு விலகுகிறார்கள், சிலர் கட்சியை விட்டு விலகுகிறார்கள், சிலர் கூட்டணியில் இருந்து விலகுகிறார்கள்.
இந்தியா கூட்டணியில் உள்ளோரை பயமுறுத்தி பிரிந்துவிட்டனர். பயந்தவர்களால் ஜனநாயகத்தை கட்டமைக்க முடியாது. ஒருவர் விலகுவது இந்தியா கூட்டணியை பலவீனப்படுத்தாது.
இதுவே உங்களுக்கு வாக்களிக்கும் கடைசி வாய்ப்பு. அதன்பிறகு தேர்தலே இருக்காது. அதாவது மோடி மீண்டு பிரதமரானால் நாட்டில் தேர்தல் முறையே இருக்காது.
இதனால், 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாட்டு மக்கள் வாக்களிப்பதற்கான கடைசி வாய்ப்பாக இருக்கும்.
நாட்டின் ஜனநாயகத்துக்கு முடிவு கட்டுவதுடன் சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்தி விடுவார் மோடி. நரேந்திர மோடியுடனான நட்பால் நவீன் பட்நாயக் என்ன லாபம் அடைந்தார்? கேள்வி எழுப்பி விமர்சித்தார்.
மேலும், ராகுல் காந்தி நாட்டை ஒருங்கிணைக்க விரும்புகிறார். ஆனால், பாஜகவும் ஆர்எஸ்எஸ்ஸும் வெறுப்புகளை உருவாக்குகின்றனர். இதன் காரணமாக நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பாஜகவும் ஆர்எஸ்எஸ்ஸும் விஷம் போன்றது, அவை நமது உரிமைகளைப் பறிக்கின்றன என்றும் கார்கே கூறினார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.