தியனமும், சூரிய நமஸ்காரமும்.. அரிச்சல்முனையில் பிரதமர் மோடி : கோதண்டராமர் கோவிலில் சிறப்பு வழிபாடு!!
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிேஷகத்தையொட்டி பிரதமர் மோடி கோவில்களுக்கு சென்று வருகிறார். அதன்படி,நேற்று திருச்சி ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் கோவிலில் தரிசனம் செய்த மோடி இன்று தனுஷ்கோடி ஸ்ரீ கோதண்டராம சுவாமி கோவிலில் பிரதமர் மோடி தரிசனம் செய்கிறார்.
முதல் நாளான நேற்று முன் தினம் சென்னைக்கு வருகை தந்த பிரதமர் மோடி, நேரு விளையாட்டு அரங்கத்துக்கு வந்த மோடி கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தார். இரண்டாம் நாளான நேற்று ராமேஸ்வரம் மற்றும் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு பிரதமர் வருகை தந்தார்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலின் தெற்கு கோபுர வாசல் வழியாக உள்ளே நுழைந்து அனைத்து சன்னதிகளிலும் அவர் சுவாமி தரிசனம் செய்தார். இதையடுத்து நேற்றிரவு ஸ்ரீராமகிருஷ்ணர் மடத்துக்கு சென்ற பிரதமர், அங்கு தங்கி ஓய்வு எடுத்துக்கொண்டு இன்று தனுஷ்கோடி ஸ்ரீ கோதண்டராம சுவாமி கோவிலில் நடைபெறும் பூஜைகளில் பங்கேற்கிறார்.
இந்நிலையில், ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி, நேற்று பகல் 12 மணி முதல் இன்று பகல் 12 மணி வரை பொதுமக்களுக்கு தடைவிதிக்கப்ட்டுள்ளது. அது மட்டும் இல்லாமல், காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை பொது போக்குவரத்திற்கும் தடை செய்யப்பட்டுள்ளது.
தற்போது, ராமேஸ்வரம் வழியாக தனது கார் மூலம் சாலை மார்க்கமாக அரிச்சல் முனைக்கு வந்தடைந்தார். பின்னர், அரிச்சல் முனை கடற்கரை பகுதியில் மலர்களை தூவி பிரதமர் மோடி வழிபாடு செய்தார். ராமர் பாலம் கட்டப்பட்டதாக நம்பப்படும் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் மலர்கள், துளசி ஆகியவற்றை தூவி பிரதமர் வழிபாடு செய்ததோடு, சிறிது நேரம் தியானம், சூரிய வழிபாடு செய்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.