பஞ்சாப்பில் கடந்த 2022-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் ஆளுங்கட்சியான காங்கிரசை வீழ்த்தி வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சி, ஆட்சியை பிடித்தது.
அக்கட்சியின் வெற்றிக்கு டெல்லி முதலமைச்சர் மற்றும் ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளரான கெஜ்ரிவாலின் இலவச மின்சாரம் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகள் கைகொடுத்தன.
இதன்பின்னர் அக்கட்சியை சேர்ந்த பகவந்த் மான் முதலமைச்சராக பதவியேற்று கொண்டார். அவரது அமைச்சரவையில் மந்திரியாக பொறுப்பேற்று கொண்டவர் பாஜா சிங் சராரி.
இந்நிலையில், அமைச்சர் பதவியில் இருந்து விலகும் முடிவை பாஜா சிங் இன்று வெளியிட்டு உள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, கட்சியின் உண்மையான விசுவாசியாக தொடர்ந்து நீடிப்பேன். இந்த மந்திரி பதவியில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுகிறேன்.
கட்சியில் ஒரு போர் வீரனாக தொடர்ந்து பணியாற்றுவேன் என கூறியுள்ளார். இதனையடுத்து, பஞ்சாப் அமைச்சரவையில் பல மந்திரிகளின் பதவி மாற்றியமைக்கப்பட கூடும் என கட்சியின் நெருங்கிய வட்டாரம் தெரிவிக்கின்றது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.