4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சப் இன்ஸ்பெக்டரை கடுமையாக தாக்கி போலீஸில் ஒப்படைத்த சம்பவம் ராஜஸ்தானில் அரங்கேறியுள்ளது.
தவுசா மாவட்டம் ராகுவாஸ் பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் பூபேந்திரசிங். அம்மாநிலத்தில் வரும் 25ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இவர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.
இந்நிலையில், 4 வயது சிறுமியை கடத்திச் சென்று தனது அறையில் வைத்து சப் இன்ஸ்பெக்டர் பூபேந்திரசிங் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் மற்றும் சிறுமியின் குடும்பத்தினர், சப்-இன்ஸ்பெக்டர் பூபேந்திரசிங்கை கடுமையாக தாக்கி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பின்னர், காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் சப்-இன்ஸ்பெக்டரை கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சப்-இன்ஸ்பெக்டர் பூபேந்திரசிங்கை கைது செய்தனர். மேலும், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடசென்னை 2? கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை…
நடிகை சமந்தாவிடம் யாரோ வம்பிழுத்து, அவர் கோபத்தோடு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜிம்மில்…
புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச் சங்கத்தின் 25வது ஆண்டு விழா நடைபெற்றது. இதையும் படியுங்க: 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல்…
மனம் கவர்ந்த பாடகி பாலிவுட்டில் “சென்னை எக்ஸ்பிரஸ்” திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் மூலம் சினிமாவிற்குள் பின்னணி பாடகியாக அடியெடுத்து…
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திராசு கிராமத்தில் 80 வயது மூதாட்டி இயற்கை உபாதை கழிக்க அருகில் உள்ள…
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பஜார் வீதியில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மற்றும் ஆதிதிராவிடர் நலக்குழு சார்பில்…
This website uses cookies.