4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சப் இன்ஸ்பெக்டரை கடுமையாக தாக்கி போலீஸில் ஒப்படைத்த சம்பவம் ராஜஸ்தானில் அரங்கேறியுள்ளது.
தவுசா மாவட்டம் ராகுவாஸ் பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் பூபேந்திரசிங். அம்மாநிலத்தில் வரும் 25ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இவர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.
இந்நிலையில், 4 வயது சிறுமியை கடத்திச் சென்று தனது அறையில் வைத்து சப் இன்ஸ்பெக்டர் பூபேந்திரசிங் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் மற்றும் சிறுமியின் குடும்பத்தினர், சப்-இன்ஸ்பெக்டர் பூபேந்திரசிங்கை கடுமையாக தாக்கி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பின்னர், காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் சப்-இன்ஸ்பெக்டரை கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சப்-இன்ஸ்பெக்டர் பூபேந்திரசிங்கை கைது செய்தனர். மேலும், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.