பேய் பிடித்ததாகக் கூறி ஆசிரமத்தில் விடப்பட்ட சிறுமியின் வாயில் எரியும் கட்டையை திணித்து கொடுமைப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சத்தீஸ்கர் மாநிலத்தின் மகாசாமுண்ட் மாவட்டத்தில் உள்ள பதேராபலி எனும் கிராமத்தில் ஜெய் குருதேவ் மனஸ் என்ற பெயரில் ஆசிரமம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ராய்ப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமிக்கு பேய் பிடித்ததாகவும், அதனை ஓட்ட வேண்டும் எனக் கூறி கடந்த சில நாட்களுக்கு முன் ஆசிரமத்திற்கு அவரது குடும்பத்தினர் அழைத்து வந்து உள்ளனர்.
அங்கு அந்த சிறுமி தங்களுக்கு கொடுக்கப்பட்ட பாயாசத்தில் விஷத்தை கலந்து விட்டதாகக் கூறி, ஆசிரம நிர்வாகியான குரு மற்றும் அவரது சீடர்கள் 2 பேர் என மொத்தம் 3 பேர் சேர்ந்து சிறுமியை கடுமையாக அடித்து, தாக்கியுள்ளனர். அதோடு, எரியும் மர கட்டையை அந்த சிறுமியின் வாயின் உள்ளே திணித்து கொடுமைப்படுத்தியுள்ளனர்.
இதில் சிறுமிக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், இது தொடர்பாக சிறுமியின் சகோதரர் போலீஸில் புகார் அளித்தார். அதன் பேரில், ஆசிரம நிர்வாகி உள்ளிட்ட 3 பேர் மீது போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.