ஜம்மு மற்றும் காஷ்மீரில் பா.ஜ.க. தலைவர்களில் ஒருவராக இருந்தவர் சோம்ராஜ். இவர் திடீரென நேற்று காணாமல் போனார். அவரை பல இடங்களிலும் தேடும் பணியில் குடும்பத்தினர் ஈடுபட்டனர்.
இந்நிலையில், கத்துவா மாவட்டத்தில் ஹிராநகர் பகுதியில் சோம்ராஜின் வீட்டுக்கு சிறிது தொலைவில் மரம் ஒன்றில் அவரது உடல் தூக்கிட்ட நிலையில் காணப்பட்டு உள்ளது. உயிரிழந்த அவரது உடலில் ரத்த காயங்கள் இருந்துள்ளன.
இதனை கவனித்த கிராமவாசி ஒருவர் போலீசுக்கு தகவல் தெரிவித்து உள்ளார். இதனை தொடர்ந்து, உடனடியாக சென்று உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஹிராநகரில் உள்ள துணை மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த சம்பவம் பற்றி விரிவான விசாரணை நடத்த வேண்டுமென்று அவரது குடும்பத்தினர் மற்றும் பா.ஜ.க. தலைவர்கள் பலர் கோரிக்கை விடுத்து உள்ளனர். மருத்துவ மற்றும் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் முடிந்த பின், அவரது உடல் இறுதி சடங்கிற்காக குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
இந்த விவகாரம் பற்றி விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை கத்துவா மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரெண்டு கொத்வால் அமைத்துள்ளார். குற்றவாளிகள் இரும்பு கரம் கொண்டு நடத்தப்படுவார்கள் என அவர் உறுதி கூறியுள்ளார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.