காணாமல் போன இந்திய ராணுவ வீரர்… காரில் ரத்தக்கறை : காஷ்மீரில் அதிர்ச்சி!!!
ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் காணாமல் போனதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தின் அச்சாதல் பகுதியில் வசிக்கும் ஜாவேத் அகமது வானி என்ற இந்திய ராணுவ வீரர் சனிக்கிழமை மாலை காணாமல் போனதாக அதிகாரிகள் தெரிவித்தனர். லடாக் பகுதியில் பணியமர்த்தப்பட்ட இவர் விடுமுறையில் இருந்துள்ளார்.
அவர் மளிகைப் பொருட்களை வாங்குவதற்காகச் சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் வீடு திரும்பாததால், அவரது குடும்பத்தினர் அவரை அருகிலுள்ள பகுதிகளிலும் சுற்றியுள்ள கிராமங்களிலும் தேடத் தொடங்கியுள்ளனர். அந்த தேடலின் பொழுது பரன்ஹால் கிராமத்தில் அவரது காரில் ஒரு ஜோடி செருப்புகள் மற்றும் இரத்தக் கறைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதன்பிறகு, காணாமல் போன ராணுவ வீரரைக் கண்டுபிடிக்க பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்திய ராணுவ வீரர் கடந்தப்பட்டதாக சில தகவல்கள் கூறுகின்றன. இருப்பினும், ராணுவ வீரர் ஜாவேத் அகமது வானி கடத்தப்பட்டதை போலீசார் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
பிரபலங்கள் திடீரென திருமணம் செய்வது குறைந்த வருடங்களில் வாழ்ந்து பின்னர் விவாகரத்து செய்வது அனைத்து துறையிலும் சகஜமான விஷயமாக மாறிவிட்டது.…
மிடில் கிளாஸ் மக்களின் கனவு! ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் சித்தார்த், மீதா ரகுநாத், சரத்குமார், தேவயானி, யோகி பாபு உள்ளிட்ட பலரது…
கோவை மாவட்டத்தில் தி.மு.க உறுப்பினர்கள் சேர்க்கை நடந்து வருகிறது.இதில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது…
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது. இதில்…
தி.மு.க நிர்வாகிகளை கைது செய்தால் மட்டுமே உடலை வாங்குவோம் என் உறவினர்கள் கோவை அரசு மருத்துவமனை பிணவறை முன்பு ஆர்ப்பாட்டத்தில்…
லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் கூட்டணி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14 ஆம்…
This website uses cookies.