பாலக்காடு: கேரளாவில் காணாமல் போன தனியார் கல்லூரி மாணவி ஆற்றில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலம் கண்ணூர் அருகே காணாமல் போன மாணவியின் உடல் ஆற்றில் மிதந்தபடி காணப்பட்டது. போலீசார் அந்த மாணவியின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து போலீசார் கூறுகையில்,
கண்ணூர் மாவட்டம் இருட்டி பகுதியை சேர்ந்தவர் செய்யது. இவரது மகள் ஜஹானா செரீனா. இவர் இங்குள்ள தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 7ம் தேதி கல்லூரி சென்று விட்டு வருவதாக வெளியே சென்ற மாணவி இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இதையொட்டி பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் இருட்டி போலீசாரிடம் புகார் செய்தனர். போலீஸார் வழக்குப் பதிவு செய்து உறவினர்கள் உதவியுடன் மாணவியை தேடி வந்தார்கள். மேலும் இதுகுறித்து மாணவியின் தோழிகளிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்தப் பகுதியில் உள்ள கோழி கனவு ஆற்றில் பாலத்தின் அடியில் நேற்று மாலை மாணவியின் உடல் இறந்த நிலையில் காணப்பட்டது. போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பரிகாரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்போது இதுகுறித்து வழக்குப்பதிவு செய;த போலீசார், கல்லூரி சென்ற மாணவி ஆற்றில் பிணமாக கிடந்தது எப்படி என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.