கார் விபத்தில் சிக்கி உயிரிழந்த எம்எல்ஏ : கட்சி பொதுக்கூட்டத்தில் பங்கேற்று திரும்பிய போது சோகம்!
இன்று காலை ஹைதராபாத்தில் உள்ள படன்சேரு அருகே உள்ள ORR பகுதியில் எம்.எல்.ஏ. லாஸ்யா நந்திதா சென்ற கார், கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதியது. இதில், லாஸ்யா நந்திதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த விபத்தில் கார் ஓட்டுநர் பலத்த காயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எம்எல்ஏ லாஸ்யா நந்திதாவின் மரணம் பிஆர்எஸ் தலைவர் சந்திரசேகர ராவ் மற்றும் பிஆர்எஸ் கட்சி தலைவர்களுக்கு ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சில நாட்களுக்கு பாரத ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் சார்பில் சந்திரசேகர ராவ் பங்கேற்ற பொதுக்கூட்டம் நல்கொண்டாவில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு வீடு திரும்பி கொண்டிருந்த போது செர்லபள்ளி என்ற இடத்தில் நந்திதாவின் கார் மீது ஆட்டோ மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பின்னர் சிறு காயங்களுடன் உயிர்தப்பினார்.
சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் செகந்திராபாத் கண்டோன்மென்ட் தொகுதியில் இருந்து லாஸ்யா நந்திதா எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது தந்தை எம்எல்ஏ சாயன்னா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் காலமானார். இதைத்தொடர்ந்து அவரது மகள் லாஸ்யா நந்திதாவிற்கு பாரத ராஷ்ட்ரிய சமிதி கட்சி சீட் வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.