மோடியும் சிவனும் ஒண்ணு.. நாட்டுக்காக, மக்களுக்காக விஷம் குடிக்கும் நீலகண்டர் : முதலமைச்சர் பரபரப்பு பேச்சு!!

கர்நாடக சட்டசபை தேர்தலை முன்னிட்டு கலபுரகியில் நடந்த பொது கூட்டம் ஒன்றில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே சமீபத்தில் கலந்து கொண்டு பேசினார்.

அவர் கூட்டத்தில் பேசும்போது, பிரதமர் மோடி ஒரு விஷ பாம்பு போன்றவர். அது நஞ்சா? அல்லது இல்லையா? என நீங்களே யோசித்து பார்க்கலாம்.
நீங்கள் அதனை நக்கினால், மரணம் அடைந்து விடுவீர்கள் என்று பேசினார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

இதற்கு பா.ஜ.க. தரப்பில் கடும் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் செய்தியாளர்களுக்கு இன்று அளித்த பேட்டியில் கூறும்போது, ஒரு வளம் நிறைந்த மற்றும் வலிமையான இந்தியாவை பிரதமர் மோடி கட்டமைத்து வருகிறார்.

காங்கிரஸ் கட்சியானது விஷ கும்பல் ஆகி வருகிறது. அவர்கள் பிரதமர் மோடியை பற்றி நஞ்சை பரப்பி வருகின்றனர். பிரதமர் மோடி நீலகண்டர். அவர் நாட்டுக்காகவும், பொதுமக்களுக்காகவும் விஷம் குடித்து கொண்டிருக்கிறார் என சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர், நாட்டின் முன்னேற்றத்திற்கு இந்த எஸ்.எம்.எஸ். (சித்தராமையா, மல்லிகார்ஜூன கார்கே மற்றும் சிவகுமார்) ஆபத்து நிறைந்தவர்கள். இந்த எஸ்.எம்.எஸ்.சால் கர்நாடகாவின் வருங்காலம் அழிந்து விடும். கர்நாடகாவை இரட்டை இயந்திர அரசே பாதுகாக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

வீட்டு சுவர் ஏறி விசாரணை நடத்திய போலீஸ் : சரமாரிக் கேள்வி கேட்ட பெண்… ஷாக் வீடியோ!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ‌ ராஜலட்சுமி…

7 hours ago

எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?

நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…

7 hours ago

கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…

8 hours ago

பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகையா? அப்போ ஜனநாயகன் கதி?

தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…

9 hours ago

கள்ளக்காதலியை பார்க்க கோவை வந்த ‘துபாய் காதல் மன்னன்’ : உல்லாசத்தால் உயிர் போன சோகம்!

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…

9 hours ago

தவெக புகழ் பாடும் டூரிஸ்ட் ஃபேமிலி? போகிற போக்கில் ஆதரவை தூவிவிட்ட இயக்குனர்?

அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…

10 hours ago

This website uses cookies.