சங்கராந்தியை முன்னிட்டு மருமகன்களுக்கு செய்யப்படும் வரவேற்பு உபசரிப்புகளை பார்த்து கோதாவரி மாவட்டத்தில் திருமணத்திற்கு பெண் கிடைக்காதா என மணமகன்கள் ஏங்கி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆந்திராவின் கிருஷ்ணா, கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி ஆகிய மாவட்டங்களில் மருமகன்களுக்கு கிடைக்கும் மரியாதை வேறு எங்கும் கிடைக்காது.
மருமகன்களை தங்கள் மகன்களை விட அதிகமாக நேசிப்பது அங்கு இருக்கும் பெரியோர்களின் வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, சங்கராந்தி ஆகிய சமயங்களில் மாமனார் வீட்டுக்கு வரும் மருமகன்களை உபசரிப்பதில் அவர்கள் கைதேர்ந்தவர்கள்.
நேற்று மேற்கு கோதாவரி மாவட்டம் பீமரத்தை சேர்ந்த மாமியார் லட்சுமி என்பவர் ஹைதராபாத்தை சேர்ந்த தங்கள் மருமகனுக்கு 173 வகையான உணவுகளை பரிமாறி அசத்தி இருந்தார். அதேபோன்ற மேலும் ஒரு சம்பவம் அங்கு நடந்துள்ளது.
பீமவரத்தை சேர்ந்த காசி விஸ்வநாத், லட்சுமி தம்பதிகள் வீட்டிற்கு அவர்களுடைய மருமகன் நாராயணா மனைவியுடன் ஹைதராபாத்தில் இருந்து வந்திருந்தார்.
மருமகனை அசத்த நினைத்த மாமியார் லட்சுமி, அவருக்கு 125 வகையான இனிப்புகளை தயாரித்து வெள்ளி கிண்ணங்களில் பரிமாறி அசத்தினார்.
மாமியாரின் வரவேற்பு மரியாதை, உபசரிப்பு ஆகியவற்றை பார்த்த மருமகன் நாராயணா இவ்வளவையும் நான் எப்படி சாப்பிடுவேன் என்று புலம்பினார்.
அதனை தொடர்ந்து அவருக்கு மிகவும் பிடித்தமான இனிப்பு வகைகள் சிலவற்றை மட்டும் சாப்பிட்ட மருமகனுக்கு மாமியார் வீட்டில் அனுமதி அளிக்கப்பட்டது.
மகளுடன் மருமகன் வீட்டிற்கு வர இருந்த நிலையில் வீட்டின் முன் முப்பது அடி உயர பிளக்ஸ் பேனரும் கட்டப்பட்டிருந்தது.
ஆந்திராவின் டெல்டா மாவட்டங்களில் சங்கராந்தி முன்னிட்டு மருமகன்களுக்கு அளிக்கப்படும் வரவேற்பு மரியாதையை பார்க்கும் ஆந்திர இளைஞர்கள் திருமணத்திற்கு டெல்டா மாவட்டங்களில் இருந்து பெண் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று புலம்பு துவங்கியுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.