திருப்பதி : ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி ஏழுமலையானை வழிபட்டார்.
ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி இன்று காலை அபிஷேக சேவை மூலம் திருப்பதி கோவிலில் ஏழுமலையானை வழிபட்டார்.
சாமி தரிசனத்திற்காக நேற்று இரவு திருப்பதி மலைக்கு வந்த அவரை தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி மற்றும் அதிகாரிகள் ஆகியோர் வரவேற்றனர்.
இன்று அதிகாலை கோவிலுக்கு சென்ற அவர் ஏழுமலையானை வழிபட்டார்.
சாமி தரிசனத்திற்கு பின் அவருக்கு தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி,நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி ஆகியோர் தீர்த்த பிரசாதங்களை வழங்கினர். தொடர்ந்து தேவஸ்தானம் சார்பில் அவருக்கு வேத ஆசி வழங்கப்பட்டது.
பின்னர் கோவிலுக்கு வெளியே வந்த அவர் ஏழுமலையான் கோவிலில் ஆண்டுக்கு ஆண்டு ஏற்பட்டு வரும் அபிவிருத்தி காரணமாக இந்தியர்கள் பெருமை கொள்கின்றனர். ஏழுமலையான் ஆசி வேண்டி இங்கு வந்தேன் என்று கூறினார்.
தொடர்ந்து திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் நன்கொடையாக அவர் வழங்கினார்.
அதற்கு உரிய காசோலையை அவர் தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டியிடம் ஏழுமலையான் கோவிலில் ஒப்படைத்தார்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.