கோவா : ரூ. 21.5 லட்சத்தை திருடிவிட்டு, ஐ லவ் யூ என்று எழுதிச் சென்றதால் வீட்டின் உரிமையாளர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
கோவாவில் மார்கோவ் நகரில் வசித்து ஆசிப் செக் என்பவர் வசித்து வருகிறார். இரண்டு நாள் விடுமுறைக்குப் பிறகு வெளியூர் சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, தனது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக மார்கோவ் நகர் ஆசிப் செக் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். 20 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் மற்றும் 1.5 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். மொத்தமாக ரூ. 21.5 லட்சம் திருடு போயிருப்பதாக காவல்துறையிடம் ஆசிப் தெரிவித்துள்ளார்.
வீட்டில் ஏதாவது தடயம் கிடைக்குமா என்று காவல்துறையினர் தேடிய போது, வீட்டில் இருந்த தொலைக்காட்சியின் திரையில் ஒரு மார்க்கரைப் பயன்படுத்தி திருடர்கள் “ஐ லவ் யூ” என்று எழுதியிருப்பதைக் கண்டுபிடித்தனர். இதை பார்த்து வீட்டின் உரிமையாளர் ஆசிப் செக் அதிர்ச்சியடைந்தார்.
அடையாளம் தெரியாத குற்றவாளிகள் மீது வீடு புகுந்து திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் குற்றவாளிகளை கைது செய்வோம், என்று இன்ஸ்பெக்டர் சச்சின் நர்வேகர் தெரிவித்தார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.