மகளிர் விடுதியில் புகுந்த மர்மநபர்கள்… சிறுமிகளுக்கு மது ஊற்றி அடிக்கடி நடந்த பாலியல் வன்கொடுமை : அதிர வைக்கும் அதிர்ச்சி சம்பவம்!!

சிறுமிகளுக்கு மது கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே கடினம் குளத்தில் கான்வென்ட் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது.

இந்தநிலையில், திருவனந்தபுரம் போலீசார் கடந்த புதன்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சிலர் கான்வென்ட்டுக்குள் அத்துமீறி நுழைவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் அவர்களை போலீசார் மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நெஞ்சை உலுக்கும் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மர்ம நபர்கள் 4 பேரும் அடிக்கடி கான்வென்ட் விடுதிக்குள் சென்று அங்கிருந்த சில சிறுமிகளுக்கு மது அருந்த கொடுத்து, பின்னர் அவர்களை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் கான்வென்ட்டுக்கு ஒரு பெண் போலீஸ் அதிகாரியை அனுப்பி பாதிக்கப்பட்ட சிறுமிகளிடம் ரகசியமாக வாக்குமூலம் பெற்றனர். நீண்டகாலமாக நடக்கும் இந்த அட்டூழியத்தால் சிறுமிகள் பாதிக்கப்பட்டு வந்ததாக சிறுமி அழுது புலம்பியுள்ளனர். இதைத்தொடர்ந்து மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசாரின் தகவலின்படி, குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் கான்வென்ட் சிறுமியின் ஆண் நண்பர் என்பது தெரியவந்துள்ளது.

அவர்கள் கான்வென்ட் ஹாஸ்டலில் ரகசியமாக சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர். அதைத் தொடர்ந்து அவர் தனது இரண்டு நண்பர்களை விடுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அவர்கள் ஆரம்பத்தில் சிறுமிகளிடம் நட்புடன் பழகி வந்தனர்.

பின்னர், குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதிக்கு மதுவை கொண்டு வர ஆரம்பித்தனர். அதனை சிறுமிகள் குடிக்க வைத்து தனது பாலியல் சீண்டல்களை தொடங்கி அரங்கேற்றி உள்ளனர். கான்வென்ட்டிற்குள் நுழைய வேறு யாரிடமாவது உதவி பெற்றதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் பலர் இந்த குற்றத்தில் ஈடுபட்டிருக்கலாம் என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் பின்னணியில் பெரிய புள்ளிகள் தலையீடு இருக்குமோ என்று போலீசார் சந்தேகிப்பதால் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

கான்வெட் விடுதிக்குள் சிறுமிகளுக்கு நடந்த கொடூரம் குறித்து பெண்கள் அமைப்பினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வேதனை அளிப்பதாக தெரிவித்தனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

17 hours ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

19 hours ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

19 hours ago

குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!

தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…

19 hours ago

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

20 hours ago

கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…

21 hours ago

This website uses cookies.