பைக்கில் சென்ற இளைஞரின் தலையை வெட்டிய மர்மநபர்கள் : தலையை எடுத்து சென்ற கொலையாளிக்கு போலீஸ் வலை!

Author: Udayachandran RadhaKrishnan
27 December 2022, 12:42 pm
Murder - Updatenews360
Quick Share

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளியில் பைக்கில் சென்று கொண்டிருந்த நபரின் தலையை அறுத்து சென்ற மர்மநபர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள மதனப்பள்ளி புறநகர் பகுதியில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்த நபர் ஒருவர் கண்களில் மிளகாய் தூள் தூவி தலையை துண்டித்து கொலை செய்து அந்த தலையை தனியாக எடுத்து சென்ற சம்பவம் நடைபெற்றுள்ளது.

இன்று காலை அந்த பகுதி வழியாக சென்றவர்கள் காட்டுப்பகுதியில் தலை இல்லாத உடல் ஒன்று கிடைப்பதையும், அதன் அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்று விழுந்து கிடப்பதையும் பார்த்து போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

விரைந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து மதனப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கொலை செய்யப்பட்ட நபர் யார்? அவரை கொலை செய்தது யார் என்று விசாரணையை துவக்கி உள்ளனர்.

Views: - 345

0

0