மாணவி இறப்பில் மர்மம்? காவல் நிலையத்தை சூறையாடிய பொதுமக்கள் : தீ வைத்து எரித்ததால் பதற்றம்!!

ஏப்ரல் 21 ஆம் தேதி மேற்கு வங்க மாநிலம் வடக்கு தினாஜ்பூர் மாவட்டத்தில் 17 வயது மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்தியது. 10-ம் வகுப்பு படித்து வந்த அந்த மாணவி மாலையில் டியூஷன் வகுப்புகளுக்கு செல்வதற்காக வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். மாலை முதல் காணவில்லை என்று கூறப்படுகிறது. அவரை கண்டுபிடிக்க முயற்சி செய்த போதிலும், குடும்பத்தினரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

மறுநாள் காலையில் போலீசில் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அப்பகுதி மக்கள் அவரது உடலை கால்வாயில் கண்டெடுத்தனர். மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார் என பொதுமக்கள் குற்றம்சாட்டி புகார் அளித்தனர்.

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டதாகக் கூறி, அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு டயர்களை எரித்தும், பல கடைகளுக்கு தீ வைத்தனர். இதனையடுத்து, இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகாரும் அளித்தும் முறையான நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்கள் ஆவேசம் அடைந்து இன்று கலியாகஞ்ச் காவல் நிலையத்திற்குள் நுழைந்து தீ வைத்துள்ளனர்.

போராட்டக்காரர்கள் கற்களை வீசி, போலீஸ் தடுப்புகளை உடைத்து, போலீஸ் நிலையம் மற்றும் வாகனங்களுக்கு தீ வைத்ததால் போராட்டம் வன்முறையாக மாறியது. இதன் காரணமாக கூட்டத்தை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இது தொடர்பான புகைப்படங்களும். வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ஆஹா, இது செம கம்பேக்! சின்மயியை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த டி இமான்…

பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…

22 hours ago

ராயப்பன் கேரக்டர் உண்மையிலேயே வாழ்ந்தவர்- யார் அந்த நபர்? சீக்ரெட்டை உடைத்த அட்லீ

டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…

23 hours ago

நாச்சியப்பன் கடையில் பெயரை பொறித்து இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.. அண்ணாமலை சாடல்!

பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…

23 hours ago

நல்ல வேளை இந்த பாட்டை படத்துல வைக்கலை, சுத்தமா செட் ஆகலை? “முத்தமழை” வீடியோ பாடலால் ரசிகர்கள் ஏமாற்றம்

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…

23 hours ago

கழிவறையில் ரகசிய கேமரா… வீடியோ எடுத்து ஆசைக்கு இணங்க பெண் போலீசுக்கு மிரட்டல்..!!

கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…

24 hours ago

இணையத்தில் டைட்டில் கசிந்ததால் படத்தின் பெயரையே மாற்றிய சூர்யா 45 இயக்குனர்? அடடா…

சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…

1 day ago

This website uses cookies.