நெருங்கும் தேர்தல்.. உளவுத்துறை கொடுத்த தகவல் : பிரசாந்த் கிஷோரிடம் தஞ்சமடைந்த முதலமைச்சர்!!!
தெலங்கானாவில் வரும் 30ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. ஆனால், சந்திரசேகர ராவின் ஆளும் பிஆர்எஸ் கட்சிக்கு செல்வாக்கு குறைந்துள்ளதாக உளவுத்துறை கூறியுள்ளது.
அதாவது பொதுவாக தேர்தலுக்கு முன்னர் உளவுத்துறை ஆளும் கட்சிக்கு ஒரு அறிக்கையை கொடுக்கும். அதில் மாநில மக்களின் ஆதரவு ஆட்சிக்கும், கட்சிக்கும் எவ்வாறு இருக்கிறது என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும்.
அப்படிதான் தற்போது தெலங்கானாவில் மக்களின் மனநிலை, ஆளும் கட்சிக்கான ஆதரவு எப்படி இருக்கிறது என்பது குறித்த உளவுத்துறை அறிக்கை வெளியாகியிருக்கிறது.
அதில் ஆளும் பிஆர்எஸ் கட்சிக்கு செல்வாக்கு குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனை சரிகட்ட தான் பிரசாந்த் கிஷோரை கட்சி நாடியிருக்கிறது. அம்மாநிலத்தில் தேர்தலுக்கு இன்னும் 9 நாட்கள்தான் இருக்கின்றன.
எனவே இந்த குறுகிய நேரத்தில் பிரச்னைகளை சரி செய்ய கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான சந்திரசேகர ராவ் மற்றும் அவரது மகனும் அமைச்சருமான கே.டி.ராமாராவ் ஆகியோர் பிரசாந்த் கிஷோரிடம் நேற்று முன்தினம் 3 மணி நேரம் ஆலோசனை மேற்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனை சமூக ஆர்வலரும், தேர்தல் வியூக வகுப்பாளருமான குருராஜ் அஞ்சன் கூறியுள்ளார். இது அந்த மாநிலத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.