ஆந்திரா : சார்ஜ் செய்யும்போது மின்சார பைக் பேட்டரி வெடித்து கணவன் பலி, மனைவி மற்றும் 2 குழந்தைகள் ஆபத்தான நிலைமையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் விஜயவாடா சூர்யாராவ்பேட்டை அருகே குலாபி தோட்டப் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தவர் சிவகுமார். நேற்று முன்தினம் அவர் புதிதாக மின்சாரத்தால் இயங்கும் பைக் ஒன்றை வாங்கினார்.
புதிதாக வாங்கிய பைக்கை வீட்டின் படுக்கை அறையில் சார்ஜ் போட்டு சிவகுமார், மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் இரவு தூங்கி உள்ளனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் திடீரென்று மோட்டார் சைக்கிளின் பேட்டரி வெடித்து விபத்து ஏற்பட்டு தீ பற்றி எரிந்தது.
இந்த விபத்தில் சிவக்குமார் மரணம் அடைந்த நிலையில், அவருடைய மனைவி 40 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் மோட்டார் சைக்கிள் பேட்டரியில் இருந்து வெளியான புகையை சுவாசித்து அவருடைய இரண்டு குழந்தைகளும் கவலைக்கிடமான நிலையில் அதே மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.
இந்த சம்பவம் பற்றி விஜயவாடா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை துவக்கி உள்ளனர்.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.